News April 11, 2025
108 ஆம்புலன்ஸில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

திருச்சி மகாத்மா காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் 108 ஆம்புலன்ஸில் அவசர மருத்துவ உதவியாளர், ஓட்டுநர் போன்ற பணிகளுக்கான நேர்முக தேர்வு வரும் (12-04-25) அன்று காலை 9:00 மணியளவில் நடைபெற உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உரிய சான்றிதழ்களுடன் நேர்முக தேர்வில் பங்கேற்க 108 ஆம்புலன்ஸ் சேவை மாவட்ட மேலாளர் அழைப்பு விடுத்துள்ளார்.
Similar News
News November 7, 2025
திருச்சி: வங்கி கணக்கை பாதுகாக்க இது முக்கியம்

உங்க வங்கி மறு KYC தேவை என உங்களுக்கு அறிவித்ததா? அப்போ, உங்கள் வங்கி கணக்கை முடக்காமல், செயல்பாட்டில் வைத்திருக்க உங்கள் KYC-ஐ புதுப்பிக்கவும்.
KYC எப்படி புதுப்பிப்பது:
*உங்கள் அருகிலுள்ள வங்கி கிளைக்கோ / கிராம பஞ்சாயத்து முகாமிற்கோ செல்லவும்.
*ஆதார், வோட்டர் ஐடி, 100நாள் வேலை அட்டை கொண்டு செல்லவும்.
*விவரங்களில் எந்தவிதமான மாற்றமும் இல்லையெனில் சுய அறிக்கை (Self-declaration) போதும். SHARE IT
News November 7, 2025
திருச்சி : திருமணத்திற்கு 1 பவுன் தங்கம், ரூ.25,000!

1. திருச்சி மாவட்ட மக்களே, ஆதரவற்ற பெண்களுக்கு தமிழக அரசின் ‘அன்னை தெரசா நினைவு திருமண உதவி’ திட்டத்தின் கீழ் ரூ.25,000 பணம் & 8 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது.
2. இதற்கு உங்கள் மாவட்ட சமூக நல அலுவலரை அணுக வேண்டும்.
3. திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்.
4. திருமணத்திற்கு பிறகு அளிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
5. இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!
News November 7, 2025
திருச்சி: ட்ரோன்கள் பறக்க தடை

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வரும் 9 ஆம் தேதி இரவு திருச்சி வருகை தர உள்ளார். இந்நிலையில் பாதுகாப்பு காரணம் கருதி 09.11.2025 முதல் 10.11.2025 நள்ளிரவு 12 மணி வரை 2 நாட்கள் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது. தடையை மீறி ட்ரோன்கள் பறக்க விடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.


