News April 11, 2025
இடி, மின்னலில் இருந்து தற்காத்துக் கொள்வது எப்படி?

மழைக்காலங்களில் இடி, மின்னல் ஏற்படும்போது வீட்டிற்குள் இருப்பதே பாதுகாப்பானது. அருகில் கட்டடம் ஏதும் இல்லாவிட்டால், கார், வேன் அல்லது பஸ்ஸூக்குள் சென்றுவிட வேண்டும். வெட்டவெளியில் நிற்கக்கூடாது. இடி, மின்னல் ஓய்ந்து அரை மணி நேரம் வரை வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். குளம், ஏரி உள்ளிட்ட நீர்நிலைகள் அருகிலும் செல்லக் கூடாது. எக்காரணம் கொண்டும் மரத்தடியில் தஞ்சமடையக்கூடாது. SHARE IT!
Similar News
News April 19, 2025
₹584 கோடி.. லாபத்தில் செழிக்கும் Just Dial

Just Dial நிறுவனத்தின் நிகர லாபம் ஆண்டுக்கு 61% அதிகரித்து, தற்போது ₹584.2 கோடியாக உயர்ந்துள்ளது. 2025 நிதியாண்டின் காலாண்டில், அந்நிறுவனம் ₹157.6 கோடி லாபம் ஈட்டியுள்ளது. மேலும், மொத்த வருவாய் ₹1,142 கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த 2024-ஐ காட்டிலும் 9.5% அதிகமாகும். அதேபோல், 4-வது காலாண்டில் இந்த தளத்தை பயன்படுத்திய பயனர்களின் எண்ணிக்கை 191.3 மில்லியனாக அதிகரித்துள்ளது.
News April 19, 2025
மார்டனாகும் மெட்ராஸ்: ஜூன் முதல் மின்சார பஸ்!

சென்னையில் ஜூன் மாதம் முதல் 100 மின்சார பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வியாசர்பாடி, பெரும்பாக்கம், பல்லவன் இல்லம், தண்டையார்பேட்டை, பூந்தமல்லி ஆகிய 5 பணிமனைகளில் இருந்து பஸ்களை இயக்க போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக சார்ஜர் வசதி உள்ளிட்ட கட்டமைப்புகளை அமைக்கும் பணி நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
News April 19, 2025
பாமக- தவெக கூட்டணி பேச்சு.. யார் CM?

விஜய்க்கு நெருக்கமான ஆடிட்டர் ஒருவர் ராமதாஸுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக பாமக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இரண்டரை ஆண்டுகள் சுழற்சி முறையில் CM பதவியை ராமதாஸ் கேட்க, துணை முதல்வர் பதவிக்கு விஜய் தரப்பு ஓகே சொல்லி இருக்கிறதாம். ஆனால், CM பதவியில் ராமதாஸ் உறுதியாக நிற்க, விஜய்யிடம் தெளிவான பதில் பெற்று வாருங்கள், கூட்டணி பேசி முடிக்கலாம் என அவர் கூறியுள்ளாராம்.