News April 11, 2025
சென்னையில் வரும் 21ஆம் தேதி முதல் அமல்

விதிகளை மீறி கட்டுமான மற்றும் கட்டிட கழிவுகளை கொட்டினால் நாள் ஒன்றுக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும். பொது இடங்களில் விதிகளை மீறி கழிவுகளை கொட்டினால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும். நீர்நிலைகளில் கழிவுகளை கொட்டினால் டன் ஒன்றுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும். , கட்டட கழிவுகளை ஒப்படைப்பதில் 1 டன் வரை இலவசமாக கொடுக்கலாம். கழிவுகள் அதிக அளவு இருந்தால் அதற்கேற்ப கட்டணம் வசூலிக்கப்படும்.
Similar News
News August 13, 2025
சென்னையில் மூக்கை கடித்து குதறிய நாய்

பூவிருந்தவல்லி அருகே கட்டுமான பணி நடக்கும் இடத்தில் பாதுகாப்புக்காக இருந்த ராட்வீலர் நாய் கடித்து ஊழியர் ஒருவர் படுகாயம் அடைந்தார். அந்நாய் கடித்ததில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தவரின் மூக்கு துண்டானது. மேலும், மேல் சிகிச்சை்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து சென்னையில் நாய் தொல்லை அதிகரித்து வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
News August 13, 2025
JUST IN: தமிழிசை சௌந்தரராஜன் மீது வழக்கு பதிவு

தூய்மைப் பணியாளர்கள் 13-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனையடுத்து தூய்மைப் பணியாளர்களை உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின் படி கலைந்து செல்ல காவல்துறை அறிவுறுத்தி வந்தனர். இந்நிலையில் அவர்களை தமிழிசை சௌந்தரராஜன் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதால், அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். முன்னதாக தூய்மைப் பணியாளர்களை கைது செய்ய கூடாது என தமிழிசை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
News August 13, 2025
கூக்குரல் கேட்கலையா? உதயநிதிக்கு கண்டனம்

நடிகர் ரஜினி நடிப்பில் உருவான ‘கூலி’ திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு துணை முதல்வர் உதயநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னையில் கடந்த 2 வாரங்களாக தூய்மை பணியாளர்கள் சாலையில் போராடி வரும் நிலையில், அதனை கண்டுகொள்ளாத துணை முதல்வர் ‘கூலி’ படத்திற்கு வாழ்த்து கூறியுள்ளார் என்றும் தூய்மை பணியாளர்களின் கூக்குரல் அவருக்கு கேட்கவில்லையா? என்றும் நெட்டிசன்கள் கடுமையாக விளாசியுள்ளனர்.