News April 11, 2025
ரேஷன் கார்டில் திருத்தம் செய்யணுமா?

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் ரேஷன் அட்டை திருத்த முகாம் நாளை (ஏப்ரல் 12) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது. ரேஷன் கார்டில் பெயர் நீக்கம், திருத்தம், சேர்த்தல், முகவரி மாற்றம், மொபைல் நம்பர் அப்டேட் போன்ற அப்டேட்களைச இலவசமாக செய்து கொள்ளலாம் கட்டணம் இல்லை.
Similar News
News April 19, 2025
கலைஞர் காப்பீட்டு திட்ட மருத்துவ அட்டை வழங்கும் முகாம்

கலைஞர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் காப்பீட்டு அட்டை வழங்கும் முகாம் வருகின்ற 23, 24, 25, 26 ஆகிய 4 நாட்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னிமலை பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது. பொதுமக்கள் தங்களது ரேஷன் கார்டு, ஆதார் கார்டு கொண்டு வந்து மருத்துவ காப்பீட்டு அட்டை பெற்று பயன்பெறுமாறு பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி அசோக் அறிவித்துள்ளார்
News April 19, 2025
ஈரோடு: முக்கிய அரசு அதிகாரிகள் தொடர்பு எண்கள்!

▶️ஈரோடு மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் 0424-2266266.▶️ மாவட்ட வருவாய் அலுவலர் 0424-2266333. ▶️மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) 0424-2260999. ▶️ சிறுபான்மையினர் நல அலுவலர் 0424-2260255. ▶️மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் 0424-2260455. ▶️மாவட்ட வழங்கல் அலுவலர் 0424-2252052. ▶️மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் 0424-2275860. ▶️மாவட்ட விளையாட்டு, இளைஞர் நல அலுவலர் 0424-2223157. இத SHARE பண்ணுங்க.
News April 19, 2025
ஈரோட்டில் பொதுமக்கள் அடித்ததால் உயிரிழந்த நபர்!

ஈரோடு கொல்லம்பாளையத்தை சேர்ந்தவர்கள் சுப்பிரமணியம்- ஜெயலட்சுமி தம்பதி. இவர்கள் வீட்டிற்கு வந்த வட மாநில இளைஞர் ஒருவர், சுப்பிரமணியை கொலை செய்ய முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. அப்போது ஜெயலட்சுமி கூச்சலிட, அக்கம் பக்கத்தினர் வந்து, இளைஞரை பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர். இதில் படுகாயமடைந்த அந்த இளைஞர், மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.