News April 11, 2025
தனியார் மருத்துவமனையில் ரூ.3 கோடி மோசடி

தர்மபுரி சேலம் சாலை உள்ள தனியார் மருத்துவமனையில் மேலாண்மை இயக்குநர் சங்கீதா மருந்துகள் வழங்கும் பிரிவில் நேற்று ஆய்வு மேற்கொண்ட போது, உபகரணங்கள் வாங்குவதில் சுமார் 3 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்று இருப்பது கண்டுபிடித்து தர்மபுரி எஸ் பி அலுவலகத்தில் புகார் அளித்தார். மகேஸ்வரி, கஸ்தூரி கார்மேகம், நந்தேஷ்குமார் ஆகியோர் பண மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இவர்கள் 3 பேரையும் காவலர்கள் கைது செய்தனர்.
Similar News
News August 4, 2025
குரூப் 4 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு…

▶தர்மபுரியில் நாளை (ஜூலை 12) குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது.
▶தேர்வு எழுத ஹால் டிக்கெட் (HALL TICKET) கட்டாயம்.
▶ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை (ஏதேனும் ஒன்று) அவசியம்.
▶கருப்பு மை கொண்ட பேனா மட்டுமே அனுமதி.
▶காலை 9 மணிக்குள்ளேயே தேர்வறைக்குள் செல்ல வேண்டும்.
▶வாட்ச், மோதிரம், பெல்ட் அணிய கூடாது.
தேர்வு எழுதும் அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
News July 11, 2025
தர்மபுரியில் அரசு அலுவலர்களுக்கு ரூ.1,000 அபராதம்

தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஹெல்மெட் அணியாமல் பைக்கில் வருகின்றனர். இதை தடுக்க, மாவட்ட கலெக்டர் சதீஸ் உத்தரவின்படி, டிராபிக் போலீசார் 1,000 ரூபாய் அபராதம் விதித்து வருகின்றனர். *இதன்பிறகாவது ஹெல்மட் அணிவார்களா அதிகாரிகள்? உங்களுக்கு தெரிந்த அரசு அதிகாரிகளுக்கு பகிருங்கள்*
News July 11, 2025
தர்மபுரி மாவட்ட கல்வி அலுவலர் மாற்றம்

தமிழக கல்வித்துறையில் பணிபுரியும் மாவட்ட கல்வி அலவலர்கள் பணியிட மாறுதல் பெற்றுள்ளனர். அதன்படி, தர்மபுரி தொடக்க கல்வி அலுவலராக பணியாற்றிய எம்.சின்னமாது நிலகிரிக்கு மாற்றப்பட்டுள்ளார். தொடர்ந்து, அவருக்கு பதிலாக ராணிப்பேட்டை மாவட்ட இடைநிலை கல்வி அலுவலராக பணியாற்றி வந்த வி.விஜயகுமார் தர்மபுரிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், இவர்கள் உடனடியாக பணியில் சேரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.SHARE IT