News April 11, 2025
திருவாருர் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை வேலைநாள்

திருவாருர் மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் 26, 27.11.2024 அன்று மழைக்கால விடுமுறை விடப்பட்டது. அதனைஈடு செய்யும் விதமாக 12.04.2025 மற்றும் 19.04.2025 ஆகிய இரண்டு சனிக்கிழமைகளும் பள்ளிகள் முழு வேலை நாளாக செயல்படும் என திருவாரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.
Similar News
News December 26, 2025
திருவாரூர் மாவட்டம் ஓர் பார்வை!

சாதிவாரி கணக்கெடுப்புடன் கூடிய மக்கள் தொகை கணக்கெடுப்பு விரைவில் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கடந்த 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் திருவாரூர் மாவட்டத்தின் முக்கிய தரவுகள் குறித்து அறிந்து கொள்வோம்.
▶️ மொத்த மக்கள் தொகை – 12.64 லட்சம்
▶️ ஆண்கள் – 6.26 லட்சம்
▶️ பெண்கள்- 6.37 லட்சம்
▶️ படிப்பறிவு – 82.86 %
▶️ மொத்த பரப்பளவு – 2,274 சதுர கி.மீ. SHARE NOW!
News December 26, 2025
திருவாரூர்: டிச.31 கைரேகை பதிவு செய்ய அறிவுறுத்தல்!

திருவாரூர் மாவட்டம் முழுவதும் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தங்கள் குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும், ரேஷன் கடையில் கைரேகை பதிவு செய்யாதவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அல்லது தங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகாமையில் உள்ள எதாவது ஒரு ரேஷன் கடையில் டிச.31-ம் தேதி கைரேகை பதிவு செய்யுமாறு ரேஷன் கடை விற்பனையாளர்கள் சார்பில் கூறப்பட்டுள்ளது.
News December 26, 2025
திருவாரூர்: கணவர் இறந்ததால் மனைவி தற்கொலை

நீடாமங்கலம் அருகே குடிதாங்கிச்சேரியைச் சேர்ந்தவர் சுதாகர். இவருடைய மனைவி சித்ரா (40). சுதாகர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். இதனால் சித்ரா மன வேதனையில் இருந்துள்ளார். இந்த நிலையில், சித்ரா தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை அடுத்து அவர் சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.


