News April 11, 2025
சொந்த தொகுதிக்கு செல்லும் பிரதமர்

பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு இன்று செல்கிறார். அங்கு ₹3,880 கோடி மதிப்பீட்டிலான 44 நலத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், தொடங்கியும் வைக்கிறார். வாரணாசிக்கு வரும் பிரதமரை வரவேற்க பாஜகவினர் தீவிர ஏற்பாடுகளை செய்துள்ளனர். 4,000க்கும் மேற்பட்ட காவலர்கள், துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Similar News
News November 9, 2025
இறந்த பின்னும் ரத்த ஓட்டம்.. இந்தியாவில் முதல் முறை!

ஒருவர் இறந்த பின்பு, குறிப்பிட்ட நேரத்திற்குள் உறுப்புகளை எடுக்காவிட்டால், அதை பயன்படுத்த முடியாது. பொதுவாக, மூளைச்சாவு ஏற்பட்டதும் உறுப்புகள் தானமாக பெறப்படும். இந்நிலையில், டெல்லியில் இறந்த பெண் ஒருவரின் உறுப்புகளை தானமாக பெற, இறந்த உடலில் ரத்த ஓட்டத்தை ஏற்படுத்தியுள்ளனர் டாக்டர்கள். HCMCT ஹாஸ்பிடலில், ECMO கருவி மூலம் ரத்த ஓட்டத்தை ஏற்படுத்தி, ஆசியாவிலேயே முதல் முறையாக சாதனை படைத்துள்ளனர்.
News November 9, 2025
ஆபாச மார்பிங் போட்டோஸ்.. புகார் அளித்த அனுபமா!

போலி சோஷியல் மீடியா கணக்கு மூலம், தனது போட்டோக்களை ஆபாசமாக மார்பிங் செய்து வெளியிட்டவர் மீது நடிகை அனுபமா சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். விசாரணையில், தமிழகத்தை சேர்ந்த இளம்பெண்(20) ஒருவர்தான் அப்படி போட்டோக்களை வெளியிட்டுள்ளது தெரியவந்துள்ளது. அனுபமா மட்டுமின்றி, அப்பெண் பல பிரபலங்களின் பெயரிலும் போலி கணக்குகளை வைத்து, அதில் ஆபாசமான மார்பிங் போட்டோக்களை வெளியிட்டு வருகிறாராம்.
News November 9, 2025
Thar கார் வைத்திருப்பவர்கள் பைத்தியக்காரர்கள்: போலீஸ்

நம்முடைய வாகனம் நாம் எப்படிப்பட்டவர் என்பதை காட்டுவதாக ஹரியானா DGP ஓ.பி.சிங் தெரிவித்துள்ளார். தார் காரை பார்த்தால் கண்டிப்பாக செக் செய்த பிறகே அனுப்புவோம் என்ற அவர், ரோட்டில் தேவையில்லாத ஸ்டண்ட்டுகள் செய்பவர்களே இதனை வைத்திருப்பதாக கூறினார். மேலும், சமீபத்தில் உதவி ஆணையரின் மகன் தார் காரில் விபத்தை ஏற்படுத்தியதாகவும், Thar கார் வைத்திருப்பவர்கள் பைத்தியக்காரர்கள் எனவும் பேசியுள்ளார்.


