News April 10, 2025
RBI-யின் புதிய விதி: இனி நகைக் கடன் வாங்குவதில் சிரமம்!

RBI-ன் புதிய விதிகள் தங்க நகைக் கடன் வாங்குவதை சிரமமாக்கியுள்ளது. *கடனளிப்பவரின் Risk Management-ஐ ஆராய வேண்டும்.*முறையாக மதிப்பீடு செய்த பிறகே கடன் வழங்க வேண்டும்.*கடன் வாங்குபவர் அதைத் திருப்பி மீட்கும் தகுதி உள்ளவரா என்பதை செக் செய்ய வேண்டும்.*1 கிலோவுக்கு மேல் ஒரே நேரத்தில் அடகு வைக்க அனுமதிக்கக் கூடாது ஆகிய விதிகளால் தங்க நகைக் கடன் பெறுவதில் சிரமம் ஏற்படும் எனப் பலரும் புலம்பி வருகின்றனர்.
Similar News
News August 24, 2025
தேர்தல் ஆதரவு.. அதிமுகவுக்கு திருமாவளவன் கடிதம்

துணை ஜனாதிபதி தேர்தலில் சுதர்சன் ரெட்டிக்கு ஆதரவு கேட்டு ADMK MP-க்களுக்கு திருமாவளவன் கடிதம் எழுதியுள்ளார். கட்டாயப்படுத்தி பதவி விலக வைத்து பாஜகவின் பிடியில் தற்போது வீட்டு சிறையில் இருக்கும் ஜெகதீப் தன்கரின் நிலைதான், நாளை தமிழகத்தை சேர்ந்த CP ராதாகிருஷ்ணனுக்கும் ஏற்படும் என ஆருடம் தெரிவித்தார். முன்னதாக, NDA-வின் CPR-க்கு TN MP-க்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என EPS வலியுறுத்தியிருந்தார்.
News August 24, 2025
நாளை மறுநாள் கடைசி.. சூப்பர் வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க

SBI வங்கிகளில் 5,180 ஜூனியர் அசோசியேட்ஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசிநாள். TN-ல் 380 பணியிடங்கள் உள்ளன. மாதம் ₹24,050 – ₹64,480 வரை சம்பளம் கொண்ட இந்த பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி போதுமானது. ஆன்லைனில் முதல்நிலை, முதன்மை தேர்வு மூலம் தேர்வு செய்யப்படவுள்ளனர். தமிழ், ஆங்கிலம், இந்தி மொழியில் தேர்வு எழுதலாம். மேலும் விவரங்களுக்கு <
News August 24, 2025
நாளை மிக கவனம்

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நாளை(ஆக.25) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும் என IMD கணித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் ஆக. 30-ம் தேதி வரை மழை நீடிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையிலும் அடுத்த ஒரு வாரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், நாளை வேலை, கல்வி நிலையங்களுக்கு செல்பவர்கள் கவனமுடன் இருங்கள் நண்பர்களே..!