News April 10, 2025
அரசு பள்ளி மாணவி தற்கொலை

சென்னையை அடுத்த குன்றத்தூரில் தேர்வு பயத்தில் திவ்யதர்ஷினி என்ற அரசு பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாளை 10ஆம் வகுப்பு அறிவியல் பாடத் தேர்வு எழுதவிருந்த நிலையில், அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தற்கொலை ஒருபோதும் தீர்வாகாது என்பதை ஒவ்வொரு மாணவ, மாணவிகளும் புரிந்துக்கொள்ள வேண்டும். தைரியமாக தேர்வுகளை எதிர்கொள்ளுங்கள் என கல்வியாளர்கள் ஆலோசனை கூறுகின்றனர்.
Similar News
News April 19, 2025
ஏசி புறநகர் ரயிலில் பயணிக்க எவ்வளவு கட்டணம்?

கோடையை சமாளிக்க சென்னையில் ஏ.சி புறநகர் ரயில் சேவை இன்று முதல் இயக்கப்படுகிறது. இதில் பயணிக்க குறைந்தபட்ச கட்டணம் ₹35. பீச்-செங்கல்பட்டு வரை ₹105. தாம்பரம்-பீச் மார்க்கத்தில் 5.45AM-க்கு ( ALL STOPS) புறப்படும். பீச்-செங்கல்பட்டு 7AM-க்கும், 3.45 PM-க்கும் இயக்கப்படும். செங்கல்பட்டு-பீச் 9AM-க்கு, 5.45 PM-க்கு, பீச்-தாம்பரம் 7.35 PM-க்கும்( ALL STOPS) இயக்கப்படும். ஞாயிறு சேவை இல்லை.
News April 19, 2025
2026 தேர்தல்: தவெக ஐடி விங் ஆலோசனை!

சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள திருமண கூடத்தில் தவெகவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் ஐடி மற்றும் சோஷியல் மீடியா பிரிவு சார்பில் நடந்த இந்தக் கூட்டத்தில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்து கொண்டார். 2026 தேர்தல் வியூகம் பற்றி ஆலோசிக்கப்பட்ட இந்த கூட்டத்தில் ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
News April 19, 2025
திருமணம் ஆகாமலே பிரபல நடிகை கர்ப்பமா?

அண்மையில் பிரபல பாலிவுட் நடிகை அமிஷா படேல் பகிர்ந்துள்ள போட்டோ நெட்டிசன்களிடம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. அந்த போட்டோவில் அவர், ‘Baby bump’ உடன் இருப்பதாக நெட்டிசன்கள் சுட்டிக்காட்டுகின்றனர். பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில், நடிகை அமிஷாவிற்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் தமிழில் விஜய்யுடன் புதிய கீதை படத்தில் நடித்திருந்தார்.