News April 10, 2025

பாமக தலைவராக நானே தொடருவேன் ராமதாஸ் அறிவிப்பு

image

திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த, மருத்துவர் ராமதாஸ் பாமகவின் நிறுவனர் மற்றும் தலைவராக இனி நானே செயல்படுவேன் என்று கூறியுள்ளார். மேலும் அன்புமணி பாமக செயல் தலைவராக செயல்படுவார் என்றும், சட்டமன்றத்திற்கு நாடாளுமன்றத்திற்கு சென்றதில்லை,பதவி பெரும் ஆசை எனக்கு இல்லை என்றும்,2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இளைஞர்களை வழிநடத்த இந்த முடிவு எடுத்துள்ளதாக கூறியுள்ளார்.

Similar News

News April 19, 2025

விழுப்புரத்தில் அரசு வேலை.. கடைசி வாய்ப்பு

image

மாநில மற்றும் விழுப்புரம் போக்குவரத்து கழகத்தில் உள்ள 640 காலிப்பணியிடங்கள் நிறப்பட உள்ளன. அதன்படி 01.07.2025 தேதியின்படி, 24 வயது நிறைந்திருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத பேச தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் கட்டாயம். விருப்பமுள்ளவர்கள்<> இந்த லிங்கில்<<>> வரும் திங்கள்(ஏப்.21) ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 2 நாட்கள் மட்டும் உள்ளதால் உங்க நண்பர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க

News April 19, 2025

இன்று மின்தடை இல்லை விழுப்புரம் மின்வாரியம் அறிவிப்பு

image

விழுப்புரம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட ஜானகிபுரம் மின்னூட்டியில் இன்று (19.04.2025) மேற்கொள்ளப்பட விருந்த பராமரிப்பு பணிகள் நிர்வாக காரணங்களுக்காக ஒத்தி வைக்கப்படுகிறது. எனவே இன்று வழக்கம் போல் மின்னூட்டம் வழங்கப்படும் என உதவி செயற்பொறியாளர் / நகரம்/ விழுப்புரம் அலுவலகம் அறிவித்துள்ளது. அதனால் இன்று மின்தடை இல்லை, வழக்கம் போல மின்சாரம் இருக்கும். ஷேர் பண்ணுங்க

News April 19, 2025

ரூ. 6 லட்சம் மதிப்புள்ள 280 கிலோ குட்கா பறிமுதல்

image

திருவெண்ணெய்நல்லூர் போலீசார் நேற்று மாலை ஆனத்துாரில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பைக்கில் மூட்டையுடன் வந்த வாலிபரை நிறுத்தி சோதனை செய்த போது குட்கா இருப்பது தெரியவந்தது. விசாரணையில் பைக்கில் வந்தவர் மரக்காணம் பகுதியை சேர்ந்த மதன்குமார் என்பதும், திருவெண்ணெய்நல்லூர் அருகே தங்கி, குட்கா பொருட்களை பல பகுதிகளுக்கு சப்ளை செய்து வருவதும் தெரியவந்தது. அதனை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

error: Content is protected !!