News April 10, 2025
குமரியில் கண்பார்வை குறைபாடு தீர்க்கும் கோயில்

சுசீந்திரம் அருகே ஆஸ்ராமத்தில் கண்பார்வை குறைபாடு நீக்கும் கண்டன் சாஸ்தா கோவில் அமைந்துள்ளது.முன்னொரு காலத்தில் கண் தெரியாத பக்தர் ஒருவர் கோயில் வாசலில் படுத்திருந்தார். சாஸ்தாவை மனக்கண்ணால் வழிபட யாரோ ஒருவர் அவர் கண்ணில் மையை தடவியுள்ளார். பின்னர் அவருக்கு பார்வையும் வந்துள்ளது. கண்ணில் மையால் எழுதி பார்வை கொடுத்ததால் இவர் “அஞ்சனம் எழுதிய கண்டன் சாஸ்தா’ என்று பெயருடன் அழைக்கப்படுகிறார்.
Similar News
News January 1, 2026
குமரி: டூவீலர் விபத்தில் முதியவர் பலி

மூலச்சல் பகுதி சுதாமணி (55) தனது பேரன் அபின்ராஜூடன் (19) டிச.30.ம் தேதி இரவு அருகில் உள்ள திருமணவிழாவுக்கு சென்று விட்டு வீட்டுக்கு நடந்து வந்துகொண்டிருந்தனர். அப்போது புறத்தால்விளையை சேர்ந்த தங்கராஜ் (72) ஓட்டி வந்த பைக் அவர்கள் மீது மோதியது. தங்கராஜ் தூக்கி வீசப்பட்டார். காயமடைந்த 3பேரும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி தங்கராஜ் இறந்து போனார். தக்கலைபோலீசார் விசாரணை நடத்தினர்
News January 1, 2026
குமரி: 10th போதும்.. ரூ.37,000 சம்பளத்தில் வங்கி வேலை!

குமரி மாவட்ட மக்களே, தனியார் வங்கியான பெடரல் வங்கியில் அலுவலக உதவியாளர் பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 10ஆம் வகுப்பு படித்தவர்கள் <
News January 1, 2026
குமரி: மது என நினைத்து மருந்து குடித்தவர் பலி!

மேல கரும்பாறையைச் சேர்ந்தவர் செல்வின் குமார் (48). இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இவர் போதையில் மது என நினைத்து களைக்கொல்லி மருந்தை எடுத்துக் குடித்ததாக கூறப்படுகிறது. ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்து போனார். இது தொடர்பாக கொற்றிக்கோடு போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


