News April 10, 2025
தி.மலை மக்களுக்கு தற்காலிக குடிநீர் விநியோகம் நிறுத்தம்

திருவண்ணாமலை மாநகராட்சிக்கு குடிநீர் வரும் உலகளாப்பாடி பிரதான நீரேற்றும் குழாய் வரும் வழியில், தண்டராம்பட்டு அருகில் நெடுஞ்சாலைத்துறை மூலம் பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேற்படி பாலம் அமைக்கும் இடத்தில் நீரேற்றும் குடிநீர் குழாய்களை மாற்றி அமைக்கும் பணி 09.04.2025 முதல் 14.04.2025 ஆகிய நாட்களுக்கு நடைபெற உள்ளதால், பெறப்படும் குடிநீர் அளவிற்கேற்ப குடிநீர் விநியோகத்தில் மாற்றம் இருக்கும்.
Similar News
News April 19, 2025
ஓட்டுநர், நடத்துநர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

போக்குவரத்து கழகத்தில் 1004 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்கள் உள்ளன. 24 – 40 வயதுடையவராக இருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 18 மாதங்கள் கனரக வாகனம் ஒட்டியதற்கான அனுபவம் வேண்டும். எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்காணல் உண்டு. விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இந்த லிங்கை <
News April 19, 2025
விஷம் குடித்த முதியவர் சிகிச்சை பலனின்றி பலி

ஆரணி, அக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். விவசாயியான இவர் உடல்நிலை குறைவால் நீண்ட காலம் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் விஷத்தை அருந்தி உள்ளார். ஆபத்தான நிலையில் ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
News April 19, 2025
ஏரியில் மூழ்கி சிறுவன் பலி

திருவண்ணாமலை, கலசபாக்கம் அடுத்த தேவராயம் பாளையத்தை சேர்ந்தவர் ஐயப்பன் (8). பள்ளி விடுமுறை என்பதால் நேற்று (ஏப்ரல்.18) ஏரியில் குளிக்க சென்று நீரில் மூழ்கி உள்ளார். அந்த வழியாக சென்ற மக்கள் சிறுவனை மீட்டு ஆதமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.