News April 3, 2024
பதற்றமான வாக்குச் சாவடிகளில் கண்காணிப்பு தீவிரம்

வெள்ளகோவில் பகுதியில் 10 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றை தேர்தல் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவந்துள்ளனர். நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் இரண்டு வாரங்கள் உள்ள நிலையில் வெள்ளகோவில் பகுதியில் தேர்தலை சமூகமாக நடத்த தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News February 27, 2026
தாராபுரம் அருகே வசமாக சிக்கிய வாலிபர்: அதிரடி கைது

தாராபுரம் அருகே தெக்கலூரில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாகக் கிடைத்த தகவலின் பேரில், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சங்கராம் (23) என்பவர் சிக்கினார். அவரிடமிருந்து 2.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 27, 2026
உடுமலை அருகே வாலிபர் தற்கொலை

உடுமலை அருகே வாளவாடியை சேர்ந்த சுப்பிரமணியன் அவருடைய மகன் வவுனிய பிரபாகரன். இவர் வேலை இல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது பிரபாகரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவ இடத்துக்கு வந்த தளி காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு உடுமலை GH-க்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News February 26, 2026
திருப்பூர்: இரவு ரோந்து பணி விவரம்

திருப்பூர் மாநகரில் இன்று (பிப்.26) இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.


