News April 10, 2025

தஹாவூர் ராணாவை காவலில் எடுக்க NIA தீவிரம்!

image

நாடு கடத்தப்பட்டு இன்று இந்தியா கொண்டு வரப்படும் தஹாவூர் ராணாவை காவலில் எடுத்து விசாரிக்க NIA திட்டமிட்டுள்ளது. 2008 மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி தஹாவூர் ராணா, அமெரிக்காவில் இருந்து நேற்று நாடு கடத்தப்பட்ட நிலையில், அவரை மும்பை (அ) டெல்லி சிறையில் அடைக்க ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. முன்னதாக அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காவலில் எடுக்க NIA தீவிரம் காட்டி வருகிறது.

Similar News

News December 1, 2025

மதுரை: கடன் தொல்லையால் முதியவர் விஷமருந்தி தற்கொலை

image

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியை சேர்ந்த ஜனார்த்தனன்(59) பல்வேறு இடங்களில் கடன் வாங்கி அதை திருப்பி செலுத்த முடியாமல் இருந்து வந்தார் கடன் கொடுத்தவர்கள் தொடர்ந்து தொல்லை படுத்தவே மன உளைச்சல் அடைந்த அவர் விஷம் குடித்தார். கொட்டாம்பட்டி அருகே சொக்கலிங்கபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் இன்று அங்கு உயிரிழந்தார். இது குறித்து கொட்டாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

News December 1, 2025

ஹீரோ ரோல் போர் அடித்து விட்டது: மம்முட்டி

image

பல டாப் ஹீரோக்கள் எத்தனை வயதானாலும் சரி, ஹீரோவாகவே நடிப்பர். ஆனால் மம்முட்டி சமீபமாக வித்தியாசமான கேரக்டர்களில் நடித்து அசத்தி வருகிறார். ‘களம் காவல்’ படத்தில் வில்லனாக நடிக்கும் அவர், ‘ஹீரோவாக நடிப்பதில் உற்சாகமில்லை, சீனியர், வில்லன் பாத்திரங்களில் தான் நடிப்பு திறமையை காட்ட அதிக வாய்ப்புகள் உள்ளன’ என்று தெரிவித்துள்ளார். ஸ்டார் இமேஜை விட நடிகராக இருப்பதே பிடிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

News December 1, 2025

BREAKING: 10 மாவட்ட பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு

image

டிட்வா புயல் எதிரொலியாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மழை தொடரும். எனவே, பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் குடை, ரெயின் கோட் போன்றவற்றை எடுத்துச் செல்லவும்.

error: Content is protected !!