News April 10, 2025

ராணுவத்தில் சேர கடைசி வாய்ப்பு-APPLY NOW!

image

இந்திய ராணுவத்தில் நடப்பாண்டிற்குரிய அக்னிவீர் ஜெனரல் டியூட்டி, டெக்னிக்கல், அலுவலக உதவியாளர் மற்றும் ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் ஆகிய பிரிவுகளுக்கு அதிகாரப்பூர்வ <>இணையத்தில்<<>> ஏப்.10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியிருந்த நிலையில், இன்றே கடைசி நாள் என்பதால் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் உடனே APPLY செய்து உங்க நண்பர்களுக்கும் இத்தகவலை SHARE பண்ணுங்க…

Similar News

News October 26, 2025

நாகை: இனி கேஸ் மானியம் பெறுவது ஈசி!

image

கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!

News October 26, 2025

நாகை: தொடர் மழை- ஆட்சியர் அறிவிப்பு

image

நாகையில் மழை, வெள்ளம் ஏற்படும்போது பொதுமக்கள் வதந்திகளுக்கு முக்கியத்துவம் தரக்கூடாது. மேலும் பயப்படாமல் உலர் உணவுகள், குடிநீர், ஆடைகளை தயாராக வைத்திருக்க வேண்டும். தண்ணீர் மற்றும் தீவனத்துடன் கால்நடைகள், வண்டிகள், விவசாய உபகரணங்கள் போன்றவை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

News October 26, 2025

நாகை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

நாகை மாவட்டத்தில் உள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சிகளிலும், அனைத்து வார்டுகளிலும் வார்டு உறுப்பினர்கள் தலைமையில், வருகிற 27, 28, 29 ஆகிய நாட்களில் சிறப்பு கூட்டம் நடத்தப்பட உள்ளது. இதில் பொதுமக்கள் பங்கேற்று குடிநீர், திடக்கழிவு மேலாண்மை, தெருவிளக்கு, சாலை பராமரிப்பு உள்ளிட்ட அடிப்படை கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!