News April 10, 2025

நீலகிரிக்கு மீண்டும் மழை எச்சரிக்கை

image

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் இன்று (ஏப்.10) பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்கள். இதை மற்றவர்களுக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்கள்.

Similar News

News April 30, 2025

நீலகிரி: கார் கண்ணாடியை உடைத்து திருட்டு!

image

ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் பென்மெட்சா வெங்கட் அகில் வர்மா (26). இவர் பயிற்சிக்காக ஊட்டி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவரது உறவினர்கள் ஊட்டிக்கு சுற்றுலா வந்துள்ளனர். காந்தல் முக்கோணம் பகுதியில் காரை நிறுத்திச் சென்று, மீண்டும் வந்து பார்த்தபோது காரின் பின்புற கண்ணாடி உடைக்கப்பட்டு 20 பவுன் நகை, ரூ.7 லட்சம் ரொக்கம் திருடு போயுள்ளது. இதுகுறித்த ஊட்டி மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 29, 2025

நீலகிரி: முக்கிய காவல் நிலைய தொடர்பு எண்கள்!

image

▶️ ஊட்டி – 0423-2223808. ▶️ கேத்தி – 0423-2517558. ▶️ மஞ்சூர் – 0423-2509223. ▶️ குன்னூர் டவுன் – 0423-2221836. ▶️ அப்பர் குன்னூர் – 0423-2221300. ▶️ கோத்தகிரி – 04266-271300. ▶️ சோலூர்மட்டம் – 04266-276230. ▶️ கூடலூர் – 04262-261249. ▶️ மசினகுடி – 04232526227. ▶️ தேவர்சோலை – 04262-222234. ▶️ தேவாலா – 04262-260316. ▶️ சேரம்பாடி – 04262-266639. ▶️ நெலக்கோட்டை – 04262-222231. இதை SHARE பண்ணுங்க.

News April 29, 2025

அமைச்சரிடம் மனு அளித்த  நீலகிரி தொகுதி மக்கள் இயக்க நிறுவனர்

image

நீலகிரி மாவட்டம் கூடலூர் அரசு தலைமை மருத்துவமனை மற்றும் பந்தலூர் மருத்துவமனையில் போதிய மருத்துவ பணியாளர்கள் இல்லாத காரணத்தினால் அன்றாடம் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதற்கு தீர்வு காண வேண்டும் என்று சமூக ஆர்வலரும் நீலகிரி தொகுதி மக்கள் இயக்க நிறுவனர் எஸ்கேராஜ் தமிழக சுகாதாரத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து மனு அளித்தார்.

error: Content is protected !!