News April 10, 2025

தமிழகத்தில் 3 மாதங்களில் நாய் கடித்து 8 பேர் பலி

image

தமிழகத்தில் கடந்த 3 மாதங்களில் நாய் கடித்து 8 பேர் பலியாகி இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நாய் கடித்து காயமடைந்தோர், பலியானோர் குறித்த புள்ளி விவரம் வெளியாகியுள்ளது. அதில் 2025ல் 8 பேர் பலியாகி இருப்பதாகவும், 1.5 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது. கடந்த 2024ம் ஆண்டில் 43 பேர் பலியானதாகவும், 4.80 லட்சம் பேர் தடுப்பூசி போட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 28, 2025

மார்கழி மாத கலர் கோலங்கள்!

image

வளைத்து, நெளித்து, சுழித்து போடப்படும் கோலங்கள் நம் வாழ்க்கை சுக, துக்க பின்னல்களால் நிறைந்தவை என்பதையும், சுழிகள் போல் துன்பம் வந்தாலும் துணிவுடன் இருக்கவேண்டும் என்ற தைரியத்தையும் உணர்த்துகின்றன. எனவே, மார்கழி மட்டுமல்ல வருடத்தின் 365 நாள்களும் கோலமிட தவறாதீர்கள். அந்த வகையில் சில ஸ்பெஷலான கோலங்கள் போட்டோக்களாக பகிரப்பட்டுள்ளன. அவற்றை வீட்டில் தவறாமல் முயற்சிக்கவும்.

News December 28, 2025

தலைமை செயலாளர்களுடன் PM மோடி ஆலோசனை

image

டெல்லியில், PM மோடி தலைமையில் மாநிலங்களின் தலைமை செயலாளர்கள் மாநாடு நடைபெற்றுள்ளது. இதில் மத்திய-மாநில அரசுகள் இடையிலான ஒத்துழைப்பு, பல்வேறு பிரச்னைகள் மற்றும் சீர்திருத்தங்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டுள்ளன. தேசிய அளவிலான வளர்ச்சி திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்குவது தொடர்பாகவும் பேசப்பட்டுள்ளது. வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான மனிதவளம் என்ற கருப்பொருளின் அடிப்படையில் மாநாடு நடந்தது குறிப்பிடத்தக்கது.

News December 28, 2025

தவெகவின் சின்னம்.. விரைவில் அறிவிக்கிறார் விஜய்

image

சேலத்தில் நடக்கவுள்ள விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தவெகவின் சின்னத்தை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சின்னம் கோரி தவெக விண்ணப்பித்த நிலையில் விசில், மோதிரம், உலக உருண்டை உள்ளிட்ட சின்னங்களில் ஒன்றை EC ஒதுக்கிவிட்டதாக கூறப்படுகிறது. விஜய் அறிமுகப்படுத்தும் சின்னத்தை, 15 நிமிடங்களிலேயே உலகளவில் பிரபலப்படுத்த TVK நிர்வாகிகள் ஏற்பாடு செய்வதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

error: Content is protected !!