News April 10, 2025
தமிழகத்தில் 3 மாதங்களில் நாய் கடித்து 8 பேர் பலி

தமிழகத்தில் கடந்த 3 மாதங்களில் நாய் கடித்து 8 பேர் பலியாகி இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நாய் கடித்து காயமடைந்தோர், பலியானோர் குறித்த புள்ளி விவரம் வெளியாகியுள்ளது. அதில் 2025ல் 8 பேர் பலியாகி இருப்பதாகவும், 1.5 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது. கடந்த 2024ம் ஆண்டில் 43 பேர் பலியானதாகவும், 4.80 லட்சம் பேர் தடுப்பூசி போட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 27, 2025
BREAKING: பொங்கல் பரிசு.. தமிழக அரசு அறிவித்தது

பொங்கல் பரிசுத் தொகுப்பு தயாராக உள்ளது, ஜன.10-ம் தேதிக்குள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும் என அமைச்சர் காந்தி அறிவித்துள்ளார். பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்த அறிவிப்புக்காக மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், இந்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
News December 27, 2025
15 ஆண்டு கால சோகத்திற்கு முடிவு கட்டிய இங்கிலாந்து

ஆஷஸ் தொடரின் முதல் 3 டெஸ்ட்டுகளை தோல்வியடைந்த இங்கிலாந்து, 4-வது போட்டியில் <<18683771>>போராடி வெற்றி<<>> பெற்றது. அதுமட்டுமின்றி ஆஸி., மண்ணில் 15 ஆண்டுகளாக சந்தித்து வந்த தொடர் தோல்விகளுக்கு அந்த அணி முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அங்கு இதுவரை 18 போட்டிகளில் இங்கி., தொடர் தோல்விகளை சந்தித்திருந்தது. கடைசியாக 2010-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவை 157 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வீழ்த்தியிருந்தது.
News December 27, 2025
மகளிர் உரிமைத்தொகை இனி ₹2,500.. புதுவை CM அறிவித்தார்

புதுச்சேரியில் மகளிர் உரிமைத்தொகை ₹1,000-ல் இருந்து ₹2,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என CM ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுவையில் நடைபெற்ற வீரதீர குழந்தைகள் தினவிழாவில் பேசிய அவர், இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். TN-ல் உரிமைத்தொகையாக ₹1,000 வழங்கப்பட்டு வரும் நிலையில், இது உயர்த்தி வழங்கப்படும் என CM ஸ்டாலின் கூறியிருந்தார். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


