News April 10, 2025
நீட் தேர்வு யார் நலனுக்காக கொண்டுவரப்பட்டது?

கோச்சிங் செண்டர்களின் நன்மைக்காக, சிலரின் சுயநலத்திற்காகவே நீட் தேர்வு கொண்டுவரப்பட்டுள்ளதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அனைத்து கட்சி கூட்டத்தில் பேசிய அவர், வசதி படைத்த மாணவர்களுக்கு மட்டுமே நீட் தேர்வு சாதகமாக உள்ளதாகவும், பல தரப்பட்ட சமூக பிரதிநிதித்துவத்தை இத்தேர்வு குறைத்திருப்பதாகவும் கூறியுள்ளார். நீட் தேர்வை ரத்து செய்யும் அரசின் போராட்டம் முடிவுக்கு வரவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 19, 2025
மீன்கள் விலை கிடுகிடு உயர்வு!

தூத்துக்குடி துறைமுகத்தில் மீன்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஒரு கிலோ சீலா மீன் ₹1,300, விளமீன், ஊளி மீன், பாறை மீன், நண்டு ஆகியவை தலா ₹600, கீழவாளை, பண்டாரி, தம்பா மீன்கள் தலா ₹300 – ₹600 வரை விற்பனையாகிறது. ஏப்.15 முதல் ஜூன் 14 வரை மீன்பிடித் தடைக்காலம் என்பதால் தென் மாவட்டங்களில் சில்லறை விலையில் 1 கிலோவுக்கு ₹50 – ₹100 வரை அதிகரித்துள்ளது. உங்கள் ஊரில் ஒரு கிலோ மீன் விலை என்ன?
News April 19, 2025
தங்க குண்டு மணி, பழங்கால பானை கண்டெடுப்பு!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே தங்க குண்டு மணி, பழங்கால பானை கண்டெடுக்கப்பட்டுள்ளது. 2000 ஆண்டுகளுக்கு முன்பே நாகரிகத்தில் தமிழர்கள் சிறந்து விளங்கியதற்கான சான்றுகள் அகழாய்வில் தொடர்ந்து கிடைத்து வருகின்றன. அந்த வகையில் ஆபரணங்களிலும் தமிழர்கள் அதிக கவனம் செலுத்தியதற்கான சான்று கொடும்பாளூரில் நடந்த அகழாய்வில் கிடைத்துள்ளது. அதனுடன் அழகிய மண்பானையும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
News April 19, 2025
ரத்தன் டாடாவுக்கு பாரத ரத்னா வழங்க கோரிக்கை

மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என ஆந்திர துணை சபாநாயகர் ரகுராம கிருஷ்ண ராஜூ கோரிக்கை விடுத்துள்ளார். குண்டூரில் ரத்தன் டாடாவின் சிலையை திறந்து வைத்து பேசிய ராஜூ, கல்வி, மருத்துவ துறைகளில் அவர் செய்த சாதனைகள் அளப்பரியவை என புகழ்ந்தார். ரத்தன் டாடாவின் சேவைகளை நினைவுகூரும் வகையில் பாரத ரத்னா விருது வழங்கி கெளரவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.