News April 10, 2025
காலையில் இதை செய்தால் வீட்டில் பண மழை கொட்டும்!

வாஸ்து சாஸ்திரப்படி, தினமும் காலையில் 5 விஷயங்களை செய்தால் வீட்டில் பண மழை கொட்டுமாம். 1) சூரிய உதயத்திற்கு முன் எழுந்து வேலையை தொடங்க வேண்டும். 2) ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்துவிட்டு கடவுளை தியானிக்க வேண்டும். 3) படுக்கையை ஒழுங்குப்படுத்த வேண்டும். 4) வீட்டின் நுழைவு வாயிலை சுத்தம் செய்ய வேண்டும். 5) ஜன்னல், கதவுகளை திறந்துவைத்து விளக்கு ஏற்ற வேண்டும். இதை செய்தால் செழிப்பான வாழ்க்கை அமையுமாம்.
Similar News
News September 5, 2025
டெல்லி சென்றது ஏன்? செங்கோட்டையன் விளக்கம்

பாஜக அழைத்ததால்தான் டெல்லி சென்று தலைவர்களை சந்தித்ததாக செங்கோட்டையன் கூறியுள்ளார். கட்சித் தலைமைக்கு தெரியாமல் அவர் டெல்லி சென்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த அதிரடி கருத்தை தெரிவித்துள்ளார். இதன் மூலம், அதிமுகவை ஒன்றிணைக்க BJP முயல்வதாக கூறப்படுவது வெட்ட வெளிச்சமாகியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். உங்கள் கருத்து என்ன கமெண்ட்ல சொல்லுங்க.
News September 5, 2025
செங்கோட்டையனுக்கு ஆதரவு கரம் நீட்டிய நயினார்

அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என செங்கோட்டையன் கூறியதை வரவேற்பதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். பிரிந்துள்ள அனைவரும் இணைந்து, அதிமுக கூடுதல் வலிமை பெற வேண்டும் என்பதே தனது கருத்தும் என்றும் அவர் கூறியுள்ளார். சசிகலா, OPS, டிடிவி தினகரன் ஆகியோரை கட்சியில் இணைக்க வேண்டும் என அடுத்தடுத்து பலரும் கருத்து தெரிவித்து வருவதால், இது EPS-க்கு கூடுதல் அழுத்தம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
News September 5, 2025
செங்கோட்டையனுக்கு துணையாக நிற்போம்: OPS

அதிமுக தொண்டர்கள் மனதில் நினைத்துள்ளதை செங்கோட்டையன் வெளிப்படுத்தியுள்ளதாக OPS கருத்து தெரிவித்துள்ளார். அனைவரும் ஒருங்கிணைய வேண்டும் என நினைக்கும் செங்கோட்டையனுக்கு, உறுதுணையாக நிற்போம் எனவும் அவர் கூறியுள்ளார். தொண்டர்கள் பிரிந்துள்ளதால் 4, 5 ஆண்டுகளாக எந்த தேர்தலிலும் அதிமுக வெற்றி பெற முடியவில்லை என்றும், தேர்தலில் வெற்றி பெற பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.