News April 9, 2025
தென்காசி மாவட்டத்தில் இரவு ரோந்து பணி காவலர்கள்

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி இன்று (ஏப்.9) இரவு தென்காசி, புளியங்குடி, சங்கரன்கோவில் ஆகிய உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அவசர தேவைகளுக்கு அந்தந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 31, 2025
தென்காசி: அரசு பேருந்து – லாரி மோதி விபத்து!

தென்காசியில் இருந்து கொல்லம் நோக்கி சென்ற கேரள மாநில அரசுப்பேருந்து புளியரை அருகே முன்னே சென்ற சரக்கு லாரியை முந்தி செல்ல முயன்ற நிலையில் எதிரே திடீரென ஒரு வாகனம் வந்ததின் காரணமாக அரசு பேருந்து முன்னே சென்ற லாரி பின்பகுதியில் மீது மோதி விபத்து ஏற்பட்டது. பேருந்தில் பயணித்த பத்துக்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயம் அடைந்தனர். செங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை. விபத்து குறித்து போலீஸார் விசாரனை.
News December 30, 2025
BREAKING: வாசுதேவநல்லூர் MLA-வுக்கு 2 ஆண்டு சிறை

நிதி நிறுவனம் ஒன்றில் 2016ல் பெற்ற ரூ.1 கோடி கடனை திருப்பி செலுத்த வழங்கப்பட்ட 2 காசோலைகளும் பணமின்றி திரும்பியதாக நிதி நிறுவனம் தரப்பில் வாசுதேவநல்லூர் மதிமுக MLA சதன் திருமலைகுமாருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இதில் MLA-வுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்ய ஏதுவாக 2 மாதங்களுக்கு தண்டனை நிறுத்தியும் வைக்கப்பட்டுள்ளது.
News December 30, 2025
நபார்டு வங்கியின் திட்ட அறிக்கை வெளியீடு – கலெக்டர்

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (30.12.2025) குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை (MSME) மாவட்ட தொழில் மையம் (DIC) மற்றும் மாவட்ட முன்னோடி வங்கியின் (District Lead Bank) சார்பில் நடைபெற்ற கடனுதவி வழங்கும் முகாமில் நபார்டு (NABARD) வங்கியின் 2026 – 2027 ஆம் ஆண்டிற்கான திட்ட அறிக்கை கையேட்டினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் வெளியிட்டார்.


