News April 9, 2025

மகாவீர் ஜெயந்தி முன்னிட்டு மதுபான கடைகள் விடுமுறை

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மகாவீர் ஜெயந்தி முன்னிட்டு நாளை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மதுபான கடைகளும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் எம்எஸ் பிரசாந்த் அவர்கள் தெரிவித்துள்ளார். அரசு விதிமுறையை மீறி நாளை மதுபானங்கள் விற்றால் கடை உரிமையாளர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 19, 2025

கள்ளக்குறிச்சியில் இன்று இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

image

தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வரும் நிலையில், இன்று 29 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கள்ளக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே இன்று வெளியில் வேலைக்கு செல்வோர் மற்றக்காமல் குடை அல்லது ரெயின் கோர்ட் எடுத்து செல்லவும். ஷேர் பண்ணுங்க 

News April 19, 2025

குழந்தை இல்லாத சோகம்; பெண் தற்கொலை

image

கள்ளக்குறிச்சி, ஏ.குமாரமங்கலத்தை சேர்ந்தவர் மணிமொழி. இவருக்கு திருமணம் ஆகி 11 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாததால் மனவருத்தத்தில் இருந்து வந்த அவர் எலிபேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர். தற்கொலை எதற்கும் தீர்வல்ல

News April 18, 2025

தீராத நோய் தீர்க்கும் வைத்தீஸ்வரன் கோவில்

image

ஒவ்வொரு மனித உடலும் ஆலயம் போன்றது என்பது சித்தர்களின் வாக்கு. பணம், பதவி எது இருந்தாலும் நோய்நொடி இல்லாத வாழ்க்கையே சிறந்த செல்வம். தீராத நோய்களை தீர்க்கும் தளமாக வைத்தீஸ்வரன் கோவில் உள்ளது. இங்கு நவகிரகங்கள் அனைத்தும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்து இறைவனின் கட்டளைக்குப் பணிந்து பக்தர்களின் நோய்களையும் தோஷங்களையும் போக்குவதாக ஐதீகம். தீராத நோயால் அவதிப்படும் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!