News April 3, 2024

கோவையில் அதிரடி காட்டிய பறக்கும் படையினர்

image

மக்களவை தேர்தலை முன்னிட்டு பல்வேறு இடங்களில் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கோவை தொகுதியில் நேற்று பறக்கும் படையினரின் ஆய்வில் 13 பேரிடம் இருந்து சுமார் 1,12,17,650 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல் கோவை தெற்கு தொகுதியில் ரூ.14 ஆயிரம் மதிப்புள்ள 11 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

Similar News

News April 19, 2025

வெள்ளியங்கிரி மலையில் ஒருவர் உயிரிழப்பு

image

தூத்துக்குடியைச் சேர்ந்த புவனேஷ்வரன் (18) என்ற இளைஞர், கோவை, வெள்ளிங்கிரி மலையில் ஏழாவது மலையில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, நேற்றிரவு கீழே இறங்கியுள்ளார். அப்போது கால் தவறி கீழே சரிந்த அவர், 10 மீட்டர் ஆழத்தில் உருண்டு விழுந்துள்ளார். உடனடியாக டோலி பாரம் தூக்கும் பணியாளர்கள் அவரை மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News April 19, 2025

கோவை: முக்கிய அரசு அதிகாரிகள் தொடர்பு எண்கள்!

image

▶️கோவை மாவட்ட வருவாய் அலுவலர் 0422- 2300035. ▶️மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் 0422 -2301523. ▶️சிறப்பு துணை ஆட்சியர் 0422- 2304204. ▶️மாவட்ட பின்தங்கிய வகுப்பு நல அலுவலர் 0422-2300404. ▶️மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் 0422- 2301114. ▶️மாவட்ட வழங்கல் அலுவலர் 0422- 2300569. ▶️மாவட்ட தேர்தல் அலுவலர் 0422- 2303786. ▶️உதவி இயக்குநர், நில அளவை 0422- 2300293. இதை SHARE பண்ணுங்க.

News April 19, 2025

மருதமலை செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!

image

கோவை, மருதமலை தேவஸ்தானம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மருதமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் பல்வேறு திருப்பணிகள் நடைபெற்று வருவதாலும், கோவிலில் போதிய வாகன நிறுத்துமிடம் வசதி இல்லாத காரணத்தினாலும் செவ்வாய்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, கிருத்திகை, சஷ்டி, அரசு விடுமுறை நாட்கள் மற்றும் முக்கிய விசேஷ தினங்களில், மலைக்கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை என்றனர்.

error: Content is protected !!