News April 9, 2025
காஞ்சிபுரத்தில் ரூ.1000 கோடி முதலீடு: 5000 பேருக்கு வேலை

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் அமைந்துள்ள இண்டோபேஸ் தொழிற்பூங்காவில் டிக்ஸன் டெக்னாலஜீஸ் நிறுவனம் மடிக்கணினி மற்றும் ஒருங்கிணைந்த கணினி உள்ளிட்ட மின்னனு உற்பத்தி சேவை திட்டத்தை நிறுவுவதற்கு ரூ.1000 கோடி முதலீடு செய்கிறது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்றது. இந்த திட்டத்தால் புதிதாக 5000 பேருக்கு வேலை வாய்ப்பு நிச்சயம் என கூறப்படுகிறது. SHARE TO FRIENDS
Similar News
News August 28, 2025
காஞ்சிபுரத்தில் இனி அரசு ஆபீஸ் போக தேவையில்லை!

காஞ்சிபுரம் மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெற அரசு சார்பில் முகாம் நடைபெற உள்ளது. இங்கு <
News August 28, 2025
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று(ஆக.28) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ள இடங்கள்.
▶️ பட்டம்மாள் நடேசன் மண்டபம், மாங்காடு
▶️ அரசு உயர்நிலைப்பள்ளி, மதுரமங்கலம்
▶️ ஊராட்சி மன்ற அலுவலகம், காவித்தண்டலம்
▶️ ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, திருமுடிவாக்கம்
▶️ ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மேல்கதிர்பூர்
பொதுமக்கள் நேரில் சென்று உங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து உரிய தீர்வை பெறலாம். SHARE பண்ணுங்க.
News August 27, 2025
காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (27.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.