News April 9, 2025
இந்தியாவிற்கு அழைத்து வரப்படும் தீவிரவாதி

2008 மும்பை தீவிரவாதி தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தஹாவூர் ராணா, இன்று இரவு அல்லது நாளை காலை இந்தியாவிற்கு கொண்டுவரப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு கடத்துவதற்கு தடை கோரிய ராணாவின் மனுவை அமெரிக்க உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், சிறப்பு விமானம் மூலம் அவர் இந்தியாவிற்கு அழைத்துவரப்பட உள்ளார். மும்பையில் லஷ்கர்- இ- தொய்பா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 175 பேர் கொல்லப்பட்டனர்.
Similar News
News April 19, 2025
மகளின் மாமனாருடன் ஓட்டம் பிடித்த தாய்!

என்னதான் நடக்குது? அப்படினு கேட்குற அளவுக்கு உ.பி.யில் விநோதமான காதல் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. அண்மையில், பெண்ணுக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையுடன், <<16041082>>மாமியார்<<>> ஓடிச் சென்றது பெரும் பரபரப்பானது. அடுத்த ட்விஸ்டாக படாவுனைச் சேர்ந்த மம்தா என்ற பெண், தனது மகளின் மாமனார் சைலேந்திராவுடன், ஓட்டம் பிடித்துள்ளார். இதனால் லாரி டிரைவரான அவரது கணவர் மனம் நொந்து போலீஸில் புகாரளித்துள்ளார்.
News April 19, 2025
அதே ஸ்கிரிப்ட்.. RCB-யின் 18-ம் எண் சாபம்!

நேற்று PBKS அணிக்கு எதிராக, RCB-யின் தோல்வி ஒரு dejavu- ஃபீலிங்கை கொடுக்கிறது. ஏப்ரல் 18, 2008-ல் KKR அணிக்கு எதிரான மேட்ச்சில் வெறும் 82 ரன்னில் சுருண்டது RCB. அன்று கோலி 1 ரன்னில் அவுட்டாகினார். 18 வருடங்கள் கழித்து, அதே ஏப்ரல் 18-ல் நேற்றும் 95 ரன்னிலேயே RCB சுருண்டது. நேற்றும் கோலி 1 ரன் மட்டுமே அடித்தார். அதே ஸ்கிரிப்ட் வருது. கோலி ஜெர்சி நம்பர் சொல்லி தெரியவேண்டியதில்லை.
News April 19, 2025
வீட்டில் சிலிண்டர் சீக்கிரம் காலியாவதை தடுக்க…

◆அரிசி, பருப்பு, சுண்டல் போன்றவற்றை நீரில் ஊற வைத்து, அடுப்பில் வைத்தால் சீக்கிரமாக வெந்து விடும் ◆சின்ன வளைவான பாத்திரங்களை பயன்படுத்தினால், தீ வேகமாக பரவி சமையல் சீக்கிரம் முடியும் ◆அடுப்பின் பர்னர் சுத்தமாக இருக்கிறதா என்பதை கவனியுங்கள் ◆பாத்திரங்களை கழுவியவுடன், ஈரத்தோட அடுப்பில் வைக்காதீர்கள் ◆ஃபிரிட்ஜில் இருந்து எடுத்த காய்கறிகளை சிறிது நேரம் வெளியில் வைத்துவிட்டு உபயோகப்படுத்தவும்.