News April 9, 2025
அதிகளவு புரோட்டீன் பவுடர் சாப்பிட கூடாது

வேகமாக உடற்கட்டழகை கொண்டு வருவதற்காக, அதிகளவு புரோட்டீன் பவுடர் எடுத்துக் கொண்ட இளைஞர் சென்னையில் உயிரிழந்தார். அதிகளவு புரோட்டீன் பவுடரால் உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, நீரிழிவு, புற்றுநோய், பக்கவாதம் போன்ற நோய்களைத் தூண்டும். பால் மற்றும் சர்க்கரையை செரிமானம் செய்வதில் சிக்கல் உள்ளவர்களுக்கு இரைப்பை மற்றும் குடல் அசௌகரியத்தை அனுபவிக்க நேரிடும். உணவு மூலமா புரதத்தை எடுத்துக்கொள்வது நல்லது.
Similar News
News December 17, 2025
சென்னையில் இன்று மின்தடை; உங்க ஏரியா இருக்கா?

சென்னை தி.நகர் பகுதியில் (டிசம்பர் 17) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் தணிகாசலம் சாலை, ஆற்காடு தெரு, சரவணா தெரு. மெலனி சாலை, நீலகண்ட மேத்தா தெரு, வைத்யராமன் தெரு, ராமசாமி தெரு, தியாகராய சாலை, தீனதயாளன் தெரு, பாசுதேவ் தெரு, வடக்கு போக் சாலை, பனகல் பார்க் ஆகிய பகுதிகளில் இன்று மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
News December 17, 2025
சென்னை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

சென்னை மாவட்டத்தில் இன்று (டிச.16) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News December 16, 2025
ஜனவரியில் திறக்கப்படும் பூந்தமல்லி-போரூர் மெட்ரோ!

சென்னை மெட்ரோ 2-ம் கட்ட திட்டத்தின் கீழ், பூந்தமல்லி – போரூர் இடையேயான 9 கி.மீ பாதையில் 2026 ஜனவரியில் ரயில் சேவை தொடங்க உள்ளது. நெரிசல் நேரங்களில் 6 நிமிடங்களுக்கு ஒருமுறை ரயில்கள் இயக்கப்படும். இதற்காக 13 மூன்று பெட்டி ரயில்கள் பயன்படுத்தப்படும் எனவும், இவை ஓட்டுநர் இல்லா தொழில்நுட்பம் கொண்டவை என்றாலும், ஆரம்பத்தில் ஓட்டுநர்களுடனே இயங்கும் என CMRL அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


