News April 9, 2025

அதிகளவு புரோட்டீன் பவுடர் சாப்பிட கூடாது

image

வேகமாக உடற்கட்டழகை கொண்டு வருவதற்காக, அதிகளவு புரோட்டீன் பவுடர் எடுத்துக் கொண்ட இளைஞர் சென்னையில் உயிரிழந்தார். அதிகளவு புரோட்டீன் பவுடரால் உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, நீரிழிவு, புற்றுநோய், பக்கவாதம் போன்ற நோய்களைத் தூண்டும். பால் மற்றும் சர்க்கரையை செரிமானம் செய்வதில் சிக்கல் உள்ளவர்களுக்கு இரைப்பை மற்றும் குடல் அசௌகரியத்தை அனுபவிக்க நேரிடும். உணவு மூலமா புரதத்தை எடுத்துக்கொள்வது நல்லது.

Similar News

News October 31, 2025

சென்னையில் வடகிழக்கு பருவமழை 29% கூடுதல்

image

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ’தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று வரை இயல்பை விட 36% கூடுதலாக பெய்துள்ளது. இயல்பாக 171.5 மிமீ மழை பொழியும் நிலையில், இன்று வரை 233.5 மிமீ மழை பதிவாகியுள்ளது. மேலும் சென்னையில் வடகிழக்கு பருவமழை 29% கூடுதலாக பெய்துள்ளது, 354.7 மிமீ மழை பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.

News October 31, 2025

சென்னை: கேன் வாட்டர் குடிப்போர் கவனத்திற்கு

image

சென்னை மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் பயன்படுத்த கூடாது. (SHARE பண்ணுங்க)

News October 31, 2025

சென்னை: இனிப்பு சாப்பிட்டதால் வாந்தி, மயக்கம்!

image

ஈக்காட்டுதாங்கலைச் சேர்ந்தவர் மணிகண்டன்(35). வழக்கறிஞரான இவர் கடந்த 28ம் தேதி, கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஸ்வீட் கடையில், இனிப்பு வாங்கி குடும்பத்துடன் சாப்பிட்ட போது, சிறுவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மண்கண்டன் நேற்று, கடையில் கேட்டபோது, முறையாக பதிலளிக்கவில்லை. இதையடுத்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் அளித்துள்ளார். இதுகுறித்து கீழ்ப்பாக்கம் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!