News April 3, 2024

புதுச்சேரியில் தபால் ஓட்டு போட்ட 105 வயது மூதாட்டி

image

நாடாளுமன்ற தேர்தலையொட்டி 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர், மாற்றுத்திறனாளிகள் வீடுகளில் இருந்தபடி தபால் வாக்களிக்க இந்திய தேர்தல் கமிஷன் முதல் முறையாக அனுமதித்துள்ளது. அதன்படி லாஸ்பேட்டை சேர்ந்த 105 வயது மூதாட்டி அஞ்சலை வீட்டில் இருந்தபடியே வாக்களித்தார். இதற்காக அவரது வீட்டில் அட்டைகளில் மறைக்கப்பட்ட வாக்குப்பதிவு அறை அமைத்து வாக்குப்பெட்டியை அதிகாரிகள் வைத்தனர். அவர் தனது வாக்கை பதிவு செய்தார்.

Similar News

News May 8, 2025

புதுவையில் ஜிப்மர் இயங்காது

image

மத்திய அரசு விடுமுறை தினமான புத்த பூர்ணிமாவை‌ முன்னிட்டு புதுவை ஜிப்மரில் உள்ள புறநோயாளிகள் பிரிவு வரும் 12 ஆம் தேதி இயங்காது என்றும், திங்கட்கிழமையன்று நோயாளிகள் ஜிப்மர் வருவதைத் தவிர்க்க வேண்டும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் அவசரச் சிகிச்சை பிரிவு வழக்கம் போல இயங்கும் எனவும் ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News May 8, 2025

புதுச்சேரி: உங்க தொகுதி எம்.எல்.ஏ நம்பர் இருக்கா? பாகம்-2

image

புதுச்சேரி மாநில எம்.எல்.ஏ-க்கள் செல்போன் எண்கள் (பாகம்-2)
▶️ தட்டாஞ்சாவடி, ரங்கசாமி – 9600999999 ▶️ மணவெளி, செல்வம் – 9843444799 ▶️ வில்லியனூர், இரா. சிவா- 9443117925 ▶️ லாஸ்பேட்டை, வைத்தியநாதன் – 9443384020 ▶️ திரு.பட்டினம், நாக தியாகராஜன் – 9865627559 ▶️ திருநள்ளாறு, PR.சிவா – 9865536699 ▶️ பாகூர், செந்தில் குமார் – 9600212345 ▶️முதலியார்பேட், சம்பத் – 9443287521. இந்த தகவலை ஷேர் செய்யவும்

News May 7, 2025

கடன் APPகளால் ஆபத்து – புதுகை காவல்துறையினர்

image

புதுச்சேரி மக்களே கடன் APPகள் என்ற பெயரில் GOOGLE PLAY STOREல் வலம் வருகிறது.இந்த APPகளை கடன் பெறக்கூடியவை என்று நம்ப வேண்டாம்.இந்த APPகள் மூலம் உங்கள் தகவல்கள் திருடப்படலாம். கவனமாக இருங்கள் என புதுச்சேரி சைபர் கிரைம் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.1930 என்ற சைபர் கிரைம் எண்ணில் புகார் அளிக்கலாம்.

error: Content is protected !!