News April 9, 2025

மகாவீர் ஜெயந்தி அன்று மது விற்பனைக்கு தடை

image

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு ஏப்.10ம் தேதி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுக்கூடங்களுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் அன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்தால், மதுக்கூடங்கள் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல் மற்றும் உரிமங்களை ரத்து செய்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மதுக்கூட உரிமையாளர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Similar News

News October 22, 2025

ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்

image

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. பொதுமக்கள் அனைவரும் தேவையின்றி வெளியே செல்லாமல் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News October 22, 2025

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 200 ஏரிகள் நிரம்பியது

image

ராணிப்பேட்டை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கனமழையின் காரணமாக பொன்னை பாராற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மாவட்டத்திலுள்ள 396 ஏரிகளில் 192 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது. 32 ஏரிகள் 76%-99% நிரம்பியுள்ளதாகவும், 43 ஏரிகள் 50%-75% வரை நிரம்பியுள்ளதாகவும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 22, 2025

இராணிப்பேட்டை மக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

image

மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு முக்கியமான எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (22.10.2025) வெளியிடப்பட்ட அறிவிப்பில், மழைநீரால் நிரம்பிய குளங்கள், ஆறுகள் மற்றும் பிற நீர்நிலைகளில் நீந்தல் அல்லது விளையாடுவது உயிருக்கு ஆபத்தானது என்பதால் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

error: Content is protected !!