News April 9, 2025
புதுகையில் ரேசன் குறித்து குறைதீர் முகாம்

புதுக்கோட்டையில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்திலும் குடும்ப அட்டை சம்பந்தப்பட்ட குறை தீர்ப்பு முகாம் ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் குடும்ப அட்டைதாரர்கள் பங்கேற்று குறைகள் பெயர் நீக்கம், பெயர் சேர்த்தல் உள்ளிட்ட பணிகளை செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அருணா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
Similar News
News July 7, 2025
மாவட்டத்தில் 213 இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

புதுகை மாவட்டத்தில் 213 இடங்களில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி, பகுதிகளில் நடைபெற உள்ளது. தன்னார்வ தொண்டர்கள் வீடுதோறும் சென்று அரசின் பல்வேறு திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்துக் கூறி, விண்ணப்பங்கள் மற்றும் பிரசுரங்கள் வழங்குவார்கள். அதனைப் பூர்த்தி செய்து முகாம்களில் கொடுக்கலாம், இந்த நிகழ்ச்சி 7- தேதி தொடங்கும் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
News July 7, 2025
வரலாற்றில் வாணிபமும் புதுக்கோட்டையும்

புதுகை வரலாற்றில் முக்கிய வாணிப இடமாக இருந்துள்ளது. புதுகையிலிருந்து பருத்தி, பட்டு, நல்லெண்னையும் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இம்மாவட்ட வணிகர்கள் ரோமாபுரி வணிகர்களுடன் வாணிபம் கொண்டதன் ஆதாரமாக ஆலங்குடிக்கு அருகே ரோம பொன் நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் ரோம் நாட்டு வரலாற்றில் புகழ்பெற்ற பல மன்னர்களின் முகம் பொறித்த நாணயங்களும் ஆகும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க
News July 7, 2025
புதுகை: இரவு நேர ரோந்து பணி போலீசார் விபரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (ஜூலை 6) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல்அப் செய்யலாம். பொதுமக்கள் இரவு நேர அவசர உதவிக்காக இந்த எண்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.