News April 9, 2025
கதவை திறந்து தூங்காதிங்க – தென்காசி காவல்துறை விழிப்புணர்வு

தென்காசி மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்; தென்காசி மாவட்ட மக்கள் தங்கள் இல்லங்களில் இரவு நேரத்தில் வீட்டின் கதவை திறந்து வைத்து தூங்க வேண்டாம் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. தென்காசி மாவட்டங்களில் பல இடங்களில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் சொந்த மாவட்டம் மக்களுக்கு காவல்துறை விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News November 10, 2025
தென்காசி: பெண் தீக்குளிக்க முயற்சி

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே சிந்தாமணி அம்பேத்கர் 5ஆம் தெருவைச் சேர்ந்த வள்ளியம்மாள் (43) என்பவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இந்த நிலத்தில் பயிர் செய்வது தொடர்பாக வேலுச்சாமி, கணேசன், சொக்கன் ஆகியோருடன் தகராறு இருந்துள்ளது. காவல் நிலையம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த போலீசார் அவரை காப்பாற்றினர்.
News November 10, 2025
தென்காசியில் நாளை இங்கெல்லாம் மின்தடை

தென்காசி கோட்ட செயற்பொறியாளர் (பொ) பா.கற்பகவிநாயக சுந்தரம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: மங்கம்மாள் சாலை உப மின் நிலையத்தில் நவ.11 மாதாந்திர பராமரிப்புப் பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது. தென்காசிபுதிய பேருந்து நிலையம், மங்கம்மாள் சாலை பகுதிகள், சக்தி நகர், காளிதாசன் நகர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, கீழப்புலியூர் பகுதிகளில் காலை 9 மணி 5 மணி வரை மின்தடை செய்யப்படும். SHARE!
News November 10, 2025
தென்காசி ஆட்சியர் அலுவலகத்தில் உதவி மையம்

தென்காசி மாவட்டத்தில் SIR படிவங்கள் சமந்தமான சந்தேகங்களுக்கு தொகுதி வாரியான எண்கள் உள்ளது. இந்த எண்களுக்கு அழைத்து உங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்யுங்கள்.
1.ஆட்சியர் அலுவலகம் 04633-210074 046331950
2. கடையநல்லூர் – 04633-222212 04633245666
3. ஆலங்குளம் – 04633270899 9944096957 04636223030
4. சங்கரன்கோவில் (தனி) – 04636223030
5. வாசுதேவநல்லூர் (தனி) – 04636250223 SHARE!


