News April 9, 2025
கடலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் ஏப்ரல் மாதத்திற்கான பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம் 12.4.2025 அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கடலூர் பீச்ரோட்டில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்ட வழங்கல் பிரிவில் நடத்தப்படும். இதற்கு வட்ட வழங்கல் அலுவலர் ஜெயக்குமார் தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனுக்களை பெற உள்ளார் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
Similar News
News April 18, 2025
கடலூர்: ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு?

இந்திய ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (RRBs) சார்பில் தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள 510 உதவி லோகோ பைலட் (ALP) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டிப்ளமோ, பி.ஈ/பி.டெக் முடித்த 18 முதல் 30 வயதுக்குட்பட்ட நபர்கள் rrbchennai.gov.in என்ற இணையதளம் வாயிலாக இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 11.05.2025. மத்திய அரசு வேலை தேடும் நபர்களுக்கு இதை ஷேர் செய்யவும்.
News April 18, 2025
போக்குவரத்துக் கழகத்தில் வேலை விண்ணப்பிப்பது எப்படி

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் கடலூர் மாவட்டத்தில் 41 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் ஏப்.,21ஆம் தேதிக்குள் <
News April 18, 2025
கடலூர் மாவட்ட இளைஞர்களே மிஸ் பண்ணிடாதிங்க

கடலூர் மாவட்டத்தில் சமூக சேவையில் ஈடுபட்ட 15 முதல் 35 வயதுக்குட்பட்ட நபர்கள், இளைஞர் விருது பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசுத்தொகை, பாராட்டு பத்திரம் மற்றும் பதக்கம் வழங்கப்படும். 2025 சுதந்திர தினத்தன்று விருது வழங்கப்படுகிறது. www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க மே.03 ஆம் தேதி கடைசி நாள் ஆட்சியர் அறிவித்துள்ளார்.