News April 8, 2025
விண்ணப்பித்த அன்றே பயிர்க்கடன்: அமைச்சர்

தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விண்ணப்பித்த அன்றே பயிர்க்கடன் வழங்கும் நடைமுறை தொடங்கப்பட இருப்பதாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். வங்கிகளில் நேரில் விண்ணப்பித்தால், ஒரு வாரத்திற்குள் கடன் வழங்கும் நடைமுறை தற்போது இருப்பதாக அவர் கூறியுள்ளார். இதற்கு பதிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்பித்த அன்றே கடன் வழங்கும் முறை தொடங்கப்பட இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News April 19, 2025
போர் நிறுத்த முயற்சி: டிரம்ப் ஒதுங்க என்ன காரணம்?

ரஷ்யா கடந்த 2014ல் படையெடுப்பு மூலம் உக்ரைனின் கிரீமியாவை தன்னுடன் இணைத்துக் கொண்டது. இது சட்டவிரோதமானது என சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்தன. தற்போது போரை முடிவுக்கு கொண்டு வர, உக்ரைனை ரஷ்யாவின் பகுதியாக அங்கீகரிக்க அதிபர் டிரம்ப் விரும்புகிறார். ஆனால், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அதை ஏற்க மறுக்கிறார். இந்த பிடிவாதம் தான் அமைதி பேச்சில் இருந்து டிரம்ப் ஒதுங்க காரணமாக கூறப்படுகிறது.
News April 19, 2025
அதிமுக கூட்டணியிலிருந்து SDPI விலகல்: அபூபக்கர் அறிவிப்பு

அதிமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக எஸ்.டி.பி.ஐ கட்சியின் பொதுச்செயலாளர் அபூபக்கர் சித்திக் அறிவித்துள்ளார். மேலும், பாஜகவுடன் கூட்டணி வைத்த கட்சிகள் எல்லாம் அழிந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ள அவர், பாஜகவுடன் கூட்டணி வைக்கும் எந்த அரசியல் கட்சிகளுடனும் கூட்டணி கிடையாது என்றும் தெரிவித்துள்ளார். அதேநேரம், தற்போது SDPI எந்த அரசியல் கட்சிகளுடனும் கூட்டணி வைக்கவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
News April 19, 2025
ஏன் டெவால்ட் பிராவிஸ் உடனே பிளேயிங் XI-ல் இருக்கணும்?

CSK-வில் துபே, தோனியை மட்டுமே நம்பி இருக்க முடியாது. அதே போல, மிடில் ஆர்டரில் மோசமாக சொதப்பி வருகிறது CSK. இதற்கு சரியான தீர்வாக டெவால்ட் பிராவிஸ் இருக்கக்கூடும். அவரின், T20 ஃபார்மும் சூப்பராக இருக்கிறது. அண்மையில் நடந்த SA20-ல் மிடில் ஆர்டரில் 291 ரன்களை விளாசி இருக்கிறார். CSK-விற்கும் இனி வரும் அனைத்து மேட்ச்சிலும் வெற்றி பெறுவது அவசியமானதாகும். பிராவிஸுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா?