News April 8, 2025
சென்னைக்கு 220 ரன்கள் இலக்கு

சென்னைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி வீரர் ப்ரியன்ஷ் ஆர்யாவின் அதிரடி சதத்தால் அந்த அணி 219 ரன்கள் குவித்துள்ளது. தொடக்க வீரரான ப்ரியன்ஷ் ஆர்யா 42 பந்துகளில் 103 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த ஷஷங்க் சிங் 36 பந்துகளில் 52 ரன்கள் குவித்தார். சென்னை அணி மொத்தம் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியபோதிலும் ரன் குவிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை.
Similar News
News April 29, 2025
விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு: அரசு புதிய ஆணை

சூரிய சக்தி பம்ப் செட் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு தரக்கூடாது என்ற உத்தரவை TN மின்சாரத் துறை திரும்பப் பெற்றுள்ளது. ஏப்.8-ல் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், சூரிய சக்தி பம்ப் செட் வைத்திருப்பவர்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதற்கு விவசாயிகள் இடையே எதிர்ப்புகள் கிளம்பின. இதனையடுத்து, அந்த சுற்றறிக்கையை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.
News April 29, 2025
இந்தியாவை கடுப்பேத்தும் PAK.. எல்லையில் தாக்குதல்

ஜம்மு காஷ்மீரில் இந்திய நிலைகளை நோக்கி பாகிஸ்தான் 5-வது நாளாக தாக்குதல் நடத்தியுள்ளது. பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா, பாக்., இடையே பதற்றம் நீடித்து வருகிறது. இதனிடையே எல்லை கோடு பகுதியில் பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று இரவும் குப்வாரா மற்றும் பாரமுல்லா பகுதியில் பாக் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்கு இந்திய தரப்பில் இருந்து தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.
News April 29, 2025
கனடா வாக்கு எண்ணிக்கை.. முந்தும் லிபரல் கட்சி

கனடாவில் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கனடா இன்னும் பாரம்பரியமான வாக்குச் சீட்டு முறையில்தான் தேர்தல் நடக்கிறது. வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. முதற்கட்ட வாக்கு எண்ணிக்கையில் PM மார்க் கார்னியின் லிபரல் கட்சியே முன்னிலையில் உள்ளது. அக்டோபரில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற வேண்டிய நிலையில் PM நாடாளுமன்றத்தை கலைத்ததால் தேர்தல் முன்கூட்டியே நடந்துள்ளது.