News April 8, 2025
39 பந்துகளில் சதம்

சென்னைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் இளம் வீரர் ப்ரியான்ஷ் ஆர்யா ருத்ர தாண்டவம் ஆடியிருக்கிறார். ஒருபுறம் விக்கெட்டுகள் மளமளவென சரிந்து கொண்டிருக்க, மறுபுறம் ப்ரியான்ஷ் 39 பந்துகளில் 102 ரன்களை கடந்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். இதில், 7 ஃபோர்களும் 9 சிக்சர்களும் அடங்கும். இவரது சதத்தை பஞ்சாப் அணியின் ஓனர் ப்ரீத்தி ஜிந்தா துள்ளிக் குதித்து கொண்டாடினார்.
Similar News
News November 14, 2025
ராஜஸ்தான், தெலங்கானா இடைத்தேர்தலில் காங். வெற்றி

ராஜஸ்தானின் Anta தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. அக்கட்சியின் பிரமோத் ஜெயின் 69,571 வாக்குகள் பெற்று MLA-வாக தேர்வாகியுள்ளார். இதேபோல் தெலங்கானாவின் ஜூப்ளி ஹில்ஸ் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. அக்கட்சியின் நவீன் யாதவ் 24,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியுள்ளார்.
News November 14, 2025
BREAKING: திங்கள்கிழமை முதல் அனைத்து பள்ளிகளுக்கும்…

அரசு பள்ளிகளில் பயிலும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை DCM உதயநிதி தொடங்கி வைத்துள்ளார். காரைக்குடியில் முதல்கட்டமாக 1,448 மாணவ, மாணவியருக்கு சைக்கிள்களை அவர் வழங்கினார். அனைத்து பள்ளிகளிலும் ₹248 கோடி மதிப்பில் 5,34,017 மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கப்பட உள்ளது. தற்போது, வார விடுமுறை என்பதால் வரும் திங்கள்கிழமை முதல் சைக்கிள் விநியோகம் செய்யும் பணி தொடங்கும்.
News November 14, 2025
நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி: PM மோடி

பிஹார் தேர்தல் வெற்றி நல்லாட்சி மற்றும் வளர்ச்சிக்கு கிடைத்தது என PM மோடி தெரிவித்துள்ளார். பிஹார் மக்களுக்கு தனது மனமாா்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும், மக்களின் தீர்ப்பு மேலும் உறுதியாக சேவையாற்ற உந்துதல் தரும் எனவும் தனது X பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். பிஹாரில் 200 தொகுதிகளுக்கு மேல் NDA கூட்டணி முன்னிலை உள்ளது.


