News April 8, 2025
வாகன ஓட்டிகளுக்கு காவல் துறை எச்சரிக்கை

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இன்று (08-04-2025) விடுத்துள்ள எச்சரிக்கை செய்தியில் திருப்பத்தூர் மாவட்ட மக்கள் வாகனங்களில் செல்லும்போது செல் போன் பேச வேண்டாம் என்றும் அவ்வாறு செல்போன் பேசிக்கொண்டு வாகனங்களை அலட்சியமாக ஓட்டினால் அது விபத்து ஏற்படுத்த வழிவகுக்கும் என எச்சரித்துள்ளது. ஷேர் பண்ணுங்க.
Similar News
News November 7, 2025
அறிவித்தார் திருப்பத்தூர் கலெக்டர்

திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், அவர்களின் குடும்பத்தினருக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் வருகிற நவ.12ஆம் தேதி மதியம் 2:00 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் எனவும், இதில் அனைவரும் கலந்துகொண்டு பயனடையலாம் என மாவட்ட கலெக்டர் சிவசவுந்தரவல்லி தெரிவித்துள்ளார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 7, 2025
திருப்பத்தூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையின் சார்பாக நேற்று (நவ.6) இரவு முதல் இன்று (நவ.7) காலை வரை ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் இருந்தாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனையை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்கள் (அ) 100 என்ற எண்ணை அழைத்து புகார்களை பதிவு செய்யலாம்.
News November 7, 2025
பாஜக மாநில தலைவர் வருகை – நிர்வாகிகள் ஆலோசனை

தமிழக பாஜக மாநிலத் தலைவர், நயினார் நாகேந்திரன் ‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ யாத்திரை வரும் திங்கட்கிழமை 10/11/2015 அன்று மாலை 5 மணியளவில் வாணியம்பாடி நகருக்கு வருகிறது. அதனை முன்னிட்டு அதற்கான ஏற்பாடுகள் குறித்து, வாணியம்பாடியில் இன்று (நவ.6) பாஜக மாவட்டத் தலைவர் தண்டாயுதபாணி மற்றும் பாஜக மாநில பொதுச் செயலாளர் காத்தியாயினி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.


