News April 8, 2025

மியான்மர் நிலநடுக்கத்திற்கு பலி 3,600ஆக அதிகரிப்பு

image

மியான்மர் நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 3,600ஆக அதிகரித்துள்ளது. மார்ச் 28-ல் நேரிட்ட நிலநடுக்கத்தால் மியான்மரில் பேரழிவு ஏற்பட்டுள்ளது. இடிபாடுகளுக்கு இடையே சிக்கிய பலர் பலத்த காயமடைந்து சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் தொடர்ந்து பலியாகி வருவதால் பலி அதிகரித்தபடி உள்ளது. தற்போது 5,017 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 160 பேரை காணவில்லை. இதனால் பலி மேலும் உயரக்கூடும்.

Similar News

News September 18, 2025

குழந்தைகள் இந்த வகை Slipper-களை அணியக்கூடாதா?

image

குழந்தைகள் விரும்பி அணியும் கிராக்ஸ் வகை காலணிகளை தொடர்ந்து அணிவதால் முதுகுதண்டு பிரச்னை, மூட்டுகளில் அழுத்தம், நடையில் பிரச்னை ஏற்படும் அபாயம் இருப்பதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இந்த கிராக்ஸ்-கள் Croslite என்ற இலகுவான பொருளால் உருவாக்கப்படுகிறது. இதில் சரியான கிரிப் கிடைக்காததால், இதுபோன்ற பிரச்னைகள் வரலாம் என டாக்டர்கள் கூறுகின்றனர். அனைவருக்கும் இந்த தகவலை SHARE பண்ணுங்க.

News September 18, 2025

இபிஎஸ் உடன் எந்த பகையும் இல்லை: டிடிவி

image

இபிஎஸ் உடன் எவ்வித தனிப்பட்ட பகையும் இல்லை என டிடிவி தினகரன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அமித்ஷா, அண்ணாமலை கூறியதால்தான் NDA கூட்டணியில் இணைந்ததாகவும், கூட்டணி குறித்த முடிவுகளை இபிஎஸ் எடுப்பார் என நயினார் கூறியதாலேயே அங்கிருந்து வெளியேறியதாகவும் விளக்கம் அளித்துள்ளார். CM வேட்பாளராக இபிஎஸ்-ஐ ஒருபோதும் அமமுக ஏற்காது என திட்டவட்டமாக தெரிவித்தார்.

News September 18, 2025

இந்தியா மீதான வரி 15% ஆகக் குறையும்: ஆனந்த நாகேஸ்வரன்

image

இறக்குமதி வரி தொடர்பாக இந்தியா – அமெரிக்கா இடையே நடந்துவரும் பேச்சுவார்த்தையில் விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் என்று நாட்டின் தலைமை பொருளாதார ஆலோசகர்(CEA) ஆனந்த நாகேஸ்வரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பரஸ்பர இறக்குமதி வரியானது 15% ஆகக் குறையும் என்ற அவர், வரும் நவம்பர் 30-க்குள் கூடுதலாக விதிக்கப்பட்ட 25% வரியை அமெரிக்கா விலக்கிக் கொள்ளக்கூடும் என்றும் கணித்துள்ளார்.

error: Content is protected !!