News April 8, 2025
எந்த ரேஷன் கடையிலும் பொருள் வாங்கலாம்: TN அரசு

‘ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை’ திட்டத்தின்கீழ் எந்த ரேஷன் கடையிலும் மக்கள் பொருள்களை வாங்கலாம் என்று அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் அவர் தாக்கல் செய்த கொள்கை விளக்க குறிப்பில், TN-ல் முதல்கட்டமாக 3,139 ரேஷன் கடைகளும், 2-ம் கட்டமாக 5,000 கடைகளும் நவீனமயம் ஆக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. 3-ம் கட்டமாக 10,000 கடைகள் நவீனமயமாக்கப்பட இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Similar News
News January 3, 2026
ஆயிரம் அமித்ஷா வந்தாலும் மாற்றம் நடக்காது: சீமான்

TN-ஐ யார் அதிகம் நாசம் செய்வது என்பதில் தான் திமுக, அதிமுக இடையே போட்டி நிலவுவதாக சீமான் சாடியுள்ளார். திருச்சியில் பேட்டியளித்த அவர், ஆயிரம் அமித்ஷாக்கள் வந்தாலும் TN-ல் எந்த மாற்றமும் நடக்காது என சவால் விடுத்தார். மேலும், திராவிடமும், தமிழ் தேசியமும் ஒன்று என திருமாவளவன் பேசுகிறார்; ஆனால், திராவிடம் தமிழ் தேசியத்திற்கு எதிரானது என கற்பித்தவரே அவர் தான் என்றும் கூறினார். உங்கள் கருத்து?
News January 3, 2026
₹500 நோட்டுகள் செல்லாதா?.. மத்திய அரசு CLARITY

2026 மார்ச் முதல் ₹500 நோட்டுகள் திரும்பப் பெறப்படும் என்ற தகவல்
SM-ல் பரவி வருகிறது. இந்நிலையில், ₹500 நோட்டுகளின் புழக்கம் நிறுத்தப்படும் என பரவும் செய்தி பொய்யானவை எனவும், இதுகுறித்து ரிசர்வ் வங்கி எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றும் மத்திய அரசு தெளிவுப்படுத்தியுள்ளது. மேலும், இதுபோன்ற வதந்திகளை நம்பி மக்கள் குழப்பமடைய வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News January 3, 2026
70 ஆண்டுகளை கடந்தும் பேசப்படும் ‘ரத்தக்கண்ணீர்’

‘அடியே காந்தா’ என்ற வசனம் தற்போது நகைச்சுவைக்காக பயன்படுத்தப்பட்டாலும், இந்த வசனம் இடம்பெற்ற படம் ஏற்படுத்திய தாக்கம் இன்னும் நீங்கவில்லை. M.R.ராதாவின் தனித்துவமான நடிப்பு இன்றும் ரசிக்கப்படுகிறது. திருவாரூர் தங்கராசு எழுத்தில், கிருஷ்ணன் – பஞ்சு இயக்கத்தில் உருவான ‘ரத்தக்கண்ணீர்’, தேசிய திரைப்பட ஆவணக் காப்பகத்தின் கிளாசிக் படங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. படத்தில் பிடித்த சீன் எது?


