News April 8, 2025

ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு வழக்கு.. 4 பேருக்கு ஆயுள்

image

ஜெய்ப்பூர் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2008 மே மாதம் 8 குண்டுகள் வெடித்ததில் 71 பேர் பலியான நிலையில், 180 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கில் அஸ்மி, ஷாபாஸ், சைஃப்-உர்-ரஹ்மான், முகமது சயீப்-க்கு சிறப்பு கோர்ட் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. இதே வழக்கில் முன்பு 4 பேருக்கும் தூக்கு விதிக்கப்பட்டது. அதன் மேல்முறையீடு மனு SC-ல் நிலுவையில் உள்ளது.

Similar News

News April 19, 2025

அதிமுகவில் இணைந்த தவெக மாவட்ட பொறுப்பாளர்!

image

TVK ராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளர் முள்ளிமுனை P.P.ராஜா அதிமுகவில் இணைந்தார். தனது ஆதரவாளர்களுடன் அதிமுக மாவட்டச் செயலாளர் எம்.ஏ.முனியசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைத்துக் கொண்டார். இதனை, ADMK IT விங் பதிவிட்டுள்ளது. விஜய் கட்சி தொடங்கி இன்னும் தேர்தலையே சந்திக்காத நிலையில், அவரது கட்சியிலிருந்து சிலர் விலகுவதும், கட்சிப் பொறுப்புக்கு பணம் வாங்குவதாக புகார் கூறுவதும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

News April 19, 2025

எங்களுக்கு வேற வழி தெரியல: டிரம்ப்

image

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றது முதல் உக்ரைன் – ரஷ்யா இடையிலான போரை நிறுத்த டிரம்ப் முயன்று வருகிறார். இரு தரப்பிடமும் 87 நாட்களாக தொடர்ந்து பேசி வருகிறார். இந்தச் சூழலில் இரு நாடுகளும் அமைதி பேச்சுவார்த்தைக்கு ஒத்துவரவில்லை என்றால், தங்களால் என்ன செய்ய முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார். போர் நிறுத்த முயற்சியை கைவிடுவதை தவிர வேறு வழியில்லை என பெரிய குண்டை தூக்கி போட்டிருக்கிறார் டிரம்ப்.

News April 19, 2025

நீண்ட ஆரோக்கியத்திற்கு காலையில் இதை செய்யுங்க..!

image

மூச்சுப்பயிற்சி பண்ணுங்க. அதுவே ஒட்டுமொத்த உடல் நலனுக்கும் மிக நல்லது. காலையில் மூச்சுப்பயிற்சி செய்வதால் மனக்குழப்பம், அதிக யோசனை, பதற்றம் போன்றவற்றை கட்டுப்படுத்தலாம். மேலும், இப்பயிற்சி நுரையீரலுக்கும் மிக நல்லது. தொடங்கும் போது, 3 முதல் 10 நிமிடங்கள் வரை மூச்சுப்பயிற்சியை செய்யலாம். பழக பழக, 10 – 20 நிமிடங்கள் வரை பயிற்சியை நீட்டிக்கலாம். தள்ளிப்போடாமல், இன்றே தொடங்குங்கள். SHARE IT.

error: Content is protected !!