News April 8, 2025

தமிழகத்தில் போலி என்கவுண்ட்டர்: சீமான்

image

தமிழ்நாட்டில் நடப்பது அனைத்துமே போலி என்கவுண்ட்டர்கள்தான் என்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தமிழக அரசு உண்மையான குற்றவாளிகளை கண்டறியாமல் வழக்கை முடிப்பதிலேயே மும்முரம் காட்டுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய 3 பேர் என்கவுண்ட்டரில் கொல்லப்பட்டனர். அவர்களது குற்றம் தெளிவுபடுத்தப்படவில்லை என்று சீமான் பேசியுள்ளார்.

Similar News

News November 1, 2025

நீடா அம்பானியின் விலையுயர்ந்த பொருட்கள்

image

ரிலையன்ஸ் அறக்கட்டளைத் தலைவர் நீடா அம்பானி, தனது தன்னம்பிக்கை மற்றும் ஆற்றலால் பலருக்கும் முன்மாதிரியாக உள்ளார். கல்வி, கலை, விளையாட்டு துறைகளில் பெரும் பங்களிப்பு செய்து வருகிறார். சமூக நலப்பணிகளிலும் ஆர்வமுடன் ஈடுபடுகிறார். இன்று அவரின் பிறந்தநாள். இவர் பயன்படுத்தும் விலையுயர்ந்த சொகுசு பொருட்களின் படங்களை மேலே பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க.

News November 1, 2025

நகை கடன்… HAPPY NEWS

image

தங்கம் விலை உயர்ந்து வருவதையொட்டி, கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் நகைக்கடன் தொகை, கிராமுக்கு 7,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தற்போது அமலுக்கு வந்துள்ளது. முன்னதாக, 1 கிராம் தங்கத்துக்கு ₹6,000 மட்டுமே கடனாக வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. தங்கத்தை வங்கிகளில் அடகு வைக்கும் முன், பொதுமக்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களை அறிய <<17712760>>இங்கே<<>> கிளிக் செய்யவும். SHARE IT.

News November 1, 2025

50 விநாடி விளம்பரத்திற்கு ₹5 கோடி சம்பளம்

image

50 விநாடிகள் ஓடும் டாடா ஸ்கை விளம்பரத்தில் நடிக்க, நயன்தாரா ₹5 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சினிமாவில் நடிக்க ₹10 – ₹15 கோடி சம்பளம் பெறும் நிலையில், விளம்பரத்தில் நடிக்க அவர் வாங்கும் சம்பளம் பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையான நயன்தாராவின் கைவசம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிப்படங்கள் உள்ளன.

error: Content is protected !!