News April 8, 2025
கவர்னர் பதவி விலகக் கோரி வலுக்கும் குரல்கள்!

வரலாற்றில் முதல்முறையாக மசோதாக்கள் மீது முடிவெடுக்க TN கவர்னருக்கு உச்ச நீதிமன்றம் காலக்கெடு விதித்து அளித்த தீர்ப்பு, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு என CM ஸ்டாலின் வரவேற்றுள்ளார். மேலும், கவர்னர் நிறுத்தி வைத்த 10 மசோதக்களுக்கும் உச்ச நீதிமன்றமே ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், அவர் பதவி விலக வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வருகின்றன.
Similar News
News October 31, 2025
சுபமுகூர்த்த தினம்.. கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு

ஐப்பசி மாத சுபமுகூர்த்த தினமான இன்று, அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 150 முன்பதிவு டோக்கன்களும், 2 சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 300 முன்பதிவு டோக்கன்களும் ஒதுக்கீடு செய்யப்படும் என பதிவுத்துறை தலைவர் அறிவித்துள்ளார். பதிவு செய்ய விரும்புவோர் இந்த நன்னாளில் முந்துங்கள்.
News October 31, 2025
மலைப்பாம்புடன் பிரியங்கா சோப்ரா PHOTOS

லாஸ் ஏஞ்சல்ஸில் செட்டில் ஆகிவிட்ட பிரியங்கா சோப்ரா, தனது போட்டோஷூட்களால் ரசிகர்களை இணைப்பிலேயே வைத்துள்ளார். அந்த வகையில், மலைப்பாம்பை கழுத்தில் போட்டபடி, புன்னகையான முகத்துடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். ‘நீங்க தைரியமான பொன்னு தான் அப்டின்னு ஒத்துக்குறோம் பிரியங்கா’ என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். உங்களுக்கு பிரியங்காவிடம் பிடித்தது என்ன?
News October 31, 2025
திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்

2021-ல் டெல்டாவில் விட்டதை, வரும் தேர்தலில் பிடிக்க அதிமுக தீவிரம் காட்டுகிறது. அதன் ஒருபகுதியாகவே, மழை பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல் நபராக சென்று EPS பார்வையிட்டார் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். ஒருபுறம் மாற்றுக்கட்சியினரை அதிமுகவில் இணைக்கும் பணிகளும் நடக்கிறது. அந்த வகையில், தலைஞாயிறு மேற்கு ஒன்றிய திமுக நிர்வாகி செல்வி சேவியர், Ex அமைச்சர் OS மணியன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார்.


