News April 8, 2025
TN பல்கலை.களுக்கு இனி கவர்னர் வேந்தர் இல்லை

TN பல்கலைக்கழக வேந்தர் பொறுப்புகளில் இருந்து கவர்னர் ஆர்.என்.ரவி விடுவிக்கப்பட்டுள்ளதாக திமுக MP வில்சன் தெரிவித்துள்ளார். கவர்னருக்கு பதில் பல்கலை.களுக்கு TN CM–ஐ வேந்தராக்கும் மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இதனை குறிப்பிட்டு பேசிய அவர், இனி கவர்னர் வேந்தர் இல்லை என கூறியுள்ளார். TN பல்கலை.களுக்கு இனி அரசே துணை வேந்தர்களை நியமிக்கும் எனவும் தெரிவித்தார்.
Similar News
News September 3, 2025
BREAKING: இனி பெப்சி, கோக், KFC விற்பனை கிடையாது

இந்திய பொருள்களுக்கு 50% வரி விதிக்கப்பட்டதன் எதிரொலியாக, தமிழக ஹோட்டல்களில் அமெரிக்க உணவு பொருட்களை புறக்கணிக்கவுள்ளதாக ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இனி பெப்சி, கோக், KFC போன்ற அமெரிக்க பொருள்கள் மற்றும் அமெரிக்க நிறுவனங்களின் வாட்டர் பாட்டில்களையும் ஹோட்டல்களில் விற்பனை செய்யப்படாது. அதேபோல், ஸ்விகி, சொமோட்டோ நிறுவனங்களையும் புறக்கணிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
News September 3, 2025
RECIPE: உடல் கொழுப்பை குறைக்கும் தினை தோசை

◆ நார்ச்சத்து, புரோட்டீன், இரும்புச்சத்து, கால்சியம் நிறைந்திருப்பதால், செரிமான ஆரோக்கியம் மேம்பட்டு, உடலின் கொழுப்பு குறையவும் உதவுகிறது.
➥தினை அரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றைக் கழுவி சுமார் 3 மணிநேரம் ஊற வைக்கவும்.
➥அதனை தோசை மாவு பதத்திற்கு அரைத்து, உப்பு சேர்த்து மீண்டும் 12 மணி நேரம் புளிக்க வைக்கவும். பின் தோசையாக வார்த்தெடுத்தால், சுவையான தினை தோசை தயார். SHARE IT.
News September 3, 2025
மதுரை யாருக்கு? மூர்த்தி Vs பிடிஆர் இடையே பனிப்போர்

மதுரையை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர துடிக்கும் அமைச்சர் மூர்த்திக்கு PTR முட்டுக்கட்டை போடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், இருவருக்கும் இடையே பனிப்போர் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேயர் இந்திராணியை மாற்றாமல் இருப்பதற்கு இதுதான் காரணம் எனவும் சொல்லப்படுகிறது. இருப்பினும், திமுக தலைமை மதுரையிலுள்ள 10 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற அசைன்மென்ட்டை மூர்த்தியிடம் கொடுத்திருக்கிறது.