News April 8, 2025
தண்ணீர் தொட்டியில் குடித்து, குளித்தும் மகிழ்ந்த யானைகள்

ஸ்ரீவி மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் வன விலங்குகள் அதிகம் வசிக்கும் 50 இடங்களில் நிரந்தர தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு வனவிலங்குகளுக்கு தேவையான தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. அதில் ரெங்கர் கோயில் பீட் பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியில் யானைகள் குட்டியுடன் குளிக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வனம் மற்றும் சுற்றுகாலநிலை மாற்றம் துறைகூடுதல் தலைமைச் செயலர் சுப்ரியா சாஹு பகிர்ந்துள்ளார்.
Similar News
News February 24, 2026
விருதுநகரில் வக்கீல் சேவை இலவசம்! தெரிஞ்சிக்கோங்க…

விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
1.விருதுநகர் மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 04563-260310
2.உயர்நீதிமன்ற மதுரை கிளை : 0452-2433756
3.Toll Free 1800 4252 441
4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News February 24, 2026
சிவகாசி: மகனை அடித்துக் கொன்ற தந்தை.!

சிவகாசி அருகே உள்ள ஆலமரத்துப் பட்டியைச் சேர்ந்தவர்கள், செல்வமுருகன் – கிருஷ்ணவேணி தம்பதி. கருத்து வேறுபாடு காரணமாக செல்வமுருகன் தனது தாய், தந்தையுடன் வசித்து வந்தார். இந்நிலையில் தனது மனைவி பிரிந்து செல்ல நீங்கள்தான் காரணம் என கூறி, நேற்று முன்தினம் தந்தை விஜயராஜுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விஜயகுமார், செல்வமுருகனை கர்லா கட்டையால் தாக்கியதில், மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
News February 24, 2026
விருதுநகர்: விஷம் குடித்து இளைஞர் தற்கொலை

செண்பகத்தோப்பு ராம்நகர் பகுதியை சேர்ந்தவர்கள் சுரேந்திரபாண்டியன் – மதுபாலா தம்பதி. கருத்து வேறுபாடு காரணமாக சுரேந்திரபாண்டியன் கூமாபட்டியில் வசித்து வருகிறார்.கடந்த 12-ம் தேதி மனைவியை பார்த்துவிட்டு வந்து சுரேந்திரபாண்டியன் விஷம் குதித்துள்ளார். உடனடியாக ஶ்ரீவி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பின்னர், மதுரை மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


