News April 8, 2025
மாநில அரசு சொல்வதை கவர்னர் கேட்க வேண்டும்

அரசியலமைப்பின் பிரிவு 200ன் படி கவர்னருக்கு தனி அதிகாரம் உள்ளதாக கூறப்படுவது ஏற்புடையதல்ல; பொதுவான விதியின்படி கவர்னர் என்பவர் மாநில அரசின் உதவி & ஆலோசனையின்படியே செயல்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், மசோதாவுக்கு அனுமதி வழங்கலாம், நிறுத்தி வைக்கலாம், குடியரசுத் தலைவருக்கு அனுப்பலாம் ஆகிய 3 முடிவுகளை மட்டுமே கவர்னர் எடுக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளது.
Similar News
News September 10, 2025
தமிழக பள்ளிகளில் PUBLIC EXAM இந்த ஆண்டு முதல் ரத்து

மாநில கல்விக் கொள்கையில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக, கல்வி வாரிய கூட்டம் நடைபெற்றது. அதில், இந்தாண்டு முதல் 11-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வை ரத்து செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அரசின் அறிவிப்பை அமல்படுத்த அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 10, +2 மாணவர்களுக்கு வழக்கம்போல் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது.
News September 10, 2025
BREAKING: இந்தியா அபார வெற்றி

ஆசியக் கோப்பை பெண்கள் ஹாக்கி போட்டியில் இந்திய அணி தென் கொரியாவை வீழ்த்தியது. இன்று நடந்த சூப்பர்-4 சுற்றில் பலமான தெ.கொரியாவுடன் மோதிய இந்திய அணி 4- 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இத்தொடரில் இதுவரை தோல்வி அடையாத அணியாக வலம்வரும் இந்தியா, அடுத்து சீனாவை எதிர்கொள்கிறது. ஆசியக் கோப்பையை வென்றால் 2026 உலகக் கோப்பைக்கு இந்தியா நேரடியாக தகுதிபெறும். அட்வான்ஸ் வாழ்த்துகள்!
News September 10, 2025
SCIENCE: டாக்டர்கள் நாக்கை நீட்ட சொல்வது ஏன் தெரியுமா?

உடலில் எந்த பிரச்னை என்றாலும் அதை கண்ணாடி போல் நமது நாக்கு காட்டிவிடுமாம். உதாரணத்துக்கு, நாக்கு மஞ்சளாக இருந்தால் நீர்சத்து குறைபாடு, நாக்கின் நுனி மட்டும் சிவப்பாக இருந்தால் மன அழுத்தம், நாக்கு வெள்ளையாக இருந்தால் நோய்தொற்று, அடி நாக்கு சிவப்பாக இருந்தால் சுவாசப் பிரச்னைகள் இருப்பதாக அர்த்தமாம். இதனால்தான் ஹாஸ்பிடலுக்கு சென்றாலே நாக்கை காட்டும்படி மருத்துவர் கேட்கிறார். SHARE.