News April 8, 2025
பிரம்ம குமாரி தாதி ரத்தன் மோகினி காலமானார்

பிரம்ம குமாரிகளின் தலைமை நிர்வாகி தாதி ரத்தன் மோகினி(100) அகமதாபாத்தில் காலமானார். கடந்த 2021 முதல் பிரம்ம குமாரிகளின் தலைமைப் பொறுப்பிலிருந்து வந்த இவர்தான், 1954இல் ஜப்பானில் நடந்த உலக அமைதி மாநாட்டில் பிரம்ம குமாரிகளை பிரதிநிதித்துவப்படுத்தியவர். பின்னர், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் ஆன்மிக சேவை புரிந்தார். தாதி ரத்தன் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #RIP
Similar News
News July 4, 2025
தமிழ் கடவுளை தரிசிக்க இன்று முதல் சிறப்பு பேருந்து

திருச்செந்தூர் முருகன் கோயிலில் வரும் 7-ம் தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள் அங்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். இதனையொட்டி, இன்று முதல் 6-ம் தேதி வரை திருச்செந்தூருக்கு பல்வேறு நகரங்களில் இருந்து சிறப்பு பேருந்து இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதேபோல், பக்தர்கள் சொந்த ஊர் திரும்ப ஏதுவாக 7-ம் தேதி திருச்செந்தூரில் இருந்தும் சிறப்பு பேருந்து இயக்கப்படுகிறது.
News July 4, 2025
GST வரியை குறைக்க முடிவு.. விலை குறையும் பொருள்கள்!

56-வது GST கவுன்சில் கூட்டத்தில் வரி விதிப்பு முறையில் மாற்றங்கள் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் டூத்பேஸ்ட், சோப்பு, ஐஸ்கீரிம் ஆகியவை 18% லிருந்து 12% பட்டியலுக்கு மாற வாய்ப்புள்ளது. மேலும், நெய், வெண்ணெய், குடை, ஜாம், பழச்சாறு, மருந்துப் பொருள்கள் 5% வரி பட்டியலுக்கு மாற்றப்பட உள்ளதாம். இதனால் நடுத்தர மக்களின் சுமை வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News July 4, 2025
தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவோம்: விஜய்

பரந்தூர் மக்களை CM ஸ்டாலின் நேரில் சந்தித்து பேச வேண்டும் என விஜய் வலியுறுத்தியுள்ளார். விமான நிலையம் வராது என்ற உத்தரவாதத்தை ஸ்டாலின் கொடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இல்லை என்றால் பரந்தூர் மக்களை அழைத்து வந்து தலைமைச் செயலகத்தில் ஸ்டாலினை நேரில் சந்தித்து முறையிடும் நிலை உருவாகும் எனவும் விஜய் எச்சரித்துள்ளார்.