News April 3, 2024
ஐ.டி ரெய்டில் ₹4 கோடி பறிமுதல்

மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் ₹4 கோடிக்கு மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பணப்பட்டுவாடா தொடர்பான புகாரின் அடிப்படையில் நடத்திய சோதனையில், சென்னையில் ₹2.60 கோடி, சேலத்தில் ₹70 லட்சம், திருச்சியில் ₹55 லட்சம் பறிமுதல் செய்துள்ளதாகவும், இப்பணம் முறையான ஆவணங்கள் இல்லாமல், கணக்கில் வராத பணமாக உள்ளதாகவும் வருமான வரித்துறை கூறியுள்ளது.
Similar News
News November 1, 2025
₹44,900 சம்பளம்.. மத்திய அரசில் 258 காலியிடங்கள்!

உளவுத்துறையில் காலியாக உள்ள 258 Assistant Central Intelligence Officer பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
✦வயது: 18- 27 ✦கல்வித்தகுதி: கம்ப்யூட்டர் தொடர்பான இன்ஜினியரிங் டிகிரி ✦சம்பளம்: ₹44,900 ✦விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 16 ✦முழு தகவலுக்கு <
News November 1, 2025
தமிழக மக்களிடம் மோடி மன்னிப்பு கேட்கணும்: SPK

பிஹார் மக்கள் துன்புறுத்தப்படுவதாக பொய்யான தகவலை பரப்பிய மோடி, தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என செல்வப்பெருந்தகை (SPK) வலியுறுத்தியுள்ளார். தேர்தல் லாபத்துக்காக தமிழக மக்களை பழித்துக் கூறுவது ஜனநாயகத்துக்கு எதிரானது; தமிழர்கள் உழைப்பும் அறிவும் இணைந்த மக்களாக உலகம் முழுவதும் மரியாதை பெற்றவர்கள்; அப்படி இருக்கையில் தமிழர்கள் மீதான அவதூறு கருத்தை மோடி திரும்ப பெற வேண்டும் என்றார்.
News November 1, 2025
திமுகவிடம் இருந்து தமிழ்நாட்டை மீட்போம்: விஜய்

தமிழ்நாடு உருவாக காரணமான எல்லை போராட்ட தியாகிகளையும், ‘தமிழ்நாடு’ என பெயர் சூட்ட காரணமானவர்களின் தியாகங்களையும் நினைவுகூர்வோம் என விஜய் தெரிவித்துள்ளார். மேலும், திமுகவிடம் இருந்து மக்கள் சக்தியின் துணையோடு தமிழ்நாட்டை மீட்போம் எனவும் 2026-ல் உண்மையான மக்களாட்சியை அமைப்போம் என்றும் தனது X பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 1956 நவ.1-ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


