News April 8, 2025
Share Market: விறுவிறு ஏற்றம்… முதலீட்டாளர்களுக்கு குட் நியூஸ்

நேற்று அதலபாதாளத்தில் இருந்த இந்திய பங்குச் சந்தை, இன்று உச்சத்தில் இருப்பதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அமெரிக்க வரிவிதிப்பால், நேற்று ரூ.20 லட்சம் கோடி வரை பங்குச் சந்தை இழப்பை சந்தித்தது. இந்நிலையில், இன்று வர்த்தகம் தொடங்கியதுமே சென்செக்ஸ் 1,103 புள்ளிகள் அதிகரித்து 74,124 புள்ளிகளாக உள்ளது. அதேபோல், நிஃப்டி 306 புள்ளிகள் உயர்ந்து 22,488 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
Similar News
News August 13, 2025
நகை கடன் எந்த இடத்தில் எவ்வளவு கிடைக்கும்?

RBI வழிகாட்டுதலின்படி வங்கிகள், நிதி நிறுவனங்கள் நகை கடன் வழங்குகின்றன. ₹1 லட்சம் மதிப்புள்ள தங்க நகைக்கு நிதி நிறுவனங்கள் ₹75,000 வரை (75%) கடன் வழங்கும். ஆனால், அங்கு வட்டி அதிகம் (12 – 24%). பொதுத்துறை வங்கிகள் சற்று குறைவாக ₹60,000 – ₹70,000 வரை கடன் வழங்கும். ஆறுதல் என்னவென்றால் அங்கு வட்டி விகிதம் குறைவாக (7.25 – 9%) இருக்கும். தேவையை பொறுத்து தேர்வு செய்யுங்கள் நண்பர்களே! SHARE IT.
News August 13, 2025
அதிகமாக Reels பாக்குறீங்களா.. உஷார் மக்களே!

இன்ஸ்டா, யூடியூப்பில் அதிகமாக ரீல்ஸ் பார்ப்பது மது அருந்துவதை விட 5 மடங்கு ஆபத்தானது என நரம்பியல் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர். தொடர்ந்து ரீல்ஸ் பார்ப்பது நினைவாற்றல், கவனம் ஆகியவற்றை கடுமையாக பாதிக்கிறதாம். டோபமைன் அதிகமாக சுரப்பதால், மூளை எப்போதும் விரைவான தூண்டுதலை மட்டுமே விரும்பும் விதமாக பழகிவிடுகிறது. இதனால், எந்த விஷயத்திலும் நீண்ட நேரம் கவனம் செலுத்த முடியாமல் போய்விடுகிறது.
News August 13, 2025
‘குடும்பமே என்னை கொன்று விடும்’.. பெண்ணுக்கு சோகம்

‘என்னை அழைத்துச் செல். வீட்டில் சொல்பவரை நான் திருமணம் செய்ய மறுத்துவிட்டால், என் குடும்பத்தினர் என்னை கொன்று விடுவார்கள்.’ குஜராத்தில் ஆணவக் கொலை செய்யப்பட்ட பெண், தனது காதலனுக்கு கடைசியாக அனுப்பிய மெசேஜ் இது. காதலன் கொடுத்த புகாரின்பேரில், பெண்ணின் உறவினர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், தலைமறைவான பெண்ணின் தந்தையை போலீஸ் தேடி வருகிறது. ஜூனில் நடந்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.