News April 8, 2025
திருச்சி: சொத்து வரி செலுத்தினால் ஊக்கத்தொகை

திருச்சி மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்கள் தங்களது நடப்பாண்டிற்கான சொத்து வரியினை ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் செலுத்தி 5 சதவீதம் முதல், அதிகபட்சமாக ரூ.5,000 வரை ஊக்கத்தொகையினை பெற்றுக் கொள்ளலாம். குறித்த காலத்தில் சொத்து வரி செலுத்தவில்லை என்றால் 1 சதவீதம் அபராதம் வசூலிக்கப்படும் என திருச்சி மாநகராட்சி ஆணையர் சரவணன் தெரிவித்துள்ளார். (SHARE பண்ணுங்க)
Similar News
News August 20, 2025
திருச்சி: ரயில் பயண சீட்டு விற்பனை முகவர் வேலை

திருச்சி மாவட்டத்தின் குமாரமங்கலம், கல்பட்டிசத்திரம், கொளத்தூர் ஆகிய ரயில் நிலையங்களில் பயண சீட்டு விற்பனை முகவர் வேலைக்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு திருச்சி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும். விருப்பமுள்ளவர்கள் <
News August 20, 2025
ரயில் பயண சீட்டு விற்பனை முகவர் பணி: தெற்கு ரயில்வே அறிவிப்பு

திருச்சி மாவட்ட குமாரமங்கலம், கல்பட்டிசத்திரம், கொளத்தூர், பூங்குடி ரயில் நிலையத்தில் பயண சீட்டு விற்பனை முகவர் வேலைக்கு தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அந்தந்த ரயில் நிலையத்தில் அமைந்துள்ள மாவட்ட இளைஞர்களுக்கு மட்டுமே தகுதி உள்ளது. குறைந்தபட்ச வயது 18ஆக இருக்க வேண்டும். விண்ணப்பத்தை ஆக.,25-ம் தேதிக்குள் கொடுக்க வேண்டும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தகவல்களுக்கு ரயில் நிலைய மேலாளரை அணுகவும்.
News August 19, 2025
திருச்சி: தமிழ் தெரிந்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு

திருச்சி மக்களே.. தமிழ் தெரிந்தவர்களுக்கு வங்கியில் பணி புரிய அறிய வாய்ப்பு! ரெப்கோ வங்கியில் வாடிக்கையாளர்கள் சேவை அதிகாரி காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு டிகிரி முடித்த நன்கு தமிழ் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<


