News April 8, 2025
பயங்கர நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. வடக்கு டக்கு சுமத்ரா தீவில் நள்ளிரவு 1.19 மணிக்கு பூமிக்கு அடியில் 37 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தை அடுத்து, அலறிக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய மக்கள், சாலையில் தஞ்சமடைந்தனர். இதன் பாதிப்பு குறித்தும், சுனாமி எச்சரிக்கை குறித்தும் உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை.
Similar News
News April 19, 2025
சஞ்சு சாம்சனுக்கு ஓய்வா?

ஜெய்ப்பூரில் இன்று RR vs LSG இடையே போட்டி நடைபெறவுள்ளது. இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள RR 2 போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. இதனால், அந்த அணிக்கு இப்போட்டி வாழ்வா? சாவா? போட்டியாகும். கடந்த 16ஆம் தேதி நடந்த DC-க்கு எதிரான போட்டியில் RR கேப்டன் சஞ்சு சாம்சன், காயம் காரணமாக பாதியிலேயே மைதானத்தில் இருந்து வெளியேறினார். இதனால், இன்றைய போட்டியில் அவர் பங்கேற்பது சந்தேகம் என சொல்லப்படுகிறது.
News April 19, 2025
உலக கல்லீரல் தினம்: இன்றே மது, புகையை விடுங்க

வாகனங்களுக்கு எஞ்சின் போல மனிதனுக்கு கல்லீரல். அது நன்றாக இயங்கினால் தான் மனிதன் நோய் நொடி இல்லாமல், மகிழ்ச்சியாக வாழ முடியும். கல்லீரலை பாதுகாக்க போதுமான தூக்கம், உடற்பயிற்சி, மது அருந்தாமல் இருப்பது மற்றும் நச்சுப் பொருட்கள் இல்லாத ஒரு சூழலில் வாழ்வது அவசியம். கல்லீரலை சுத்தப்படுத்த உதவும் பூண்டு, வெங்காயம், இஞ்சி, பீட்ரூட், மஞ்சள், திராட்சை போன்றவற்றை அடிக்கடி சாப்பிடுங்கள்.
News April 19, 2025
கிராம உதவியாளர்களுக்கு குரல் கொடுத்த ஓபிஎஸ்

கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். அரசு ஊழியர்களை போல காலமுறை ஊதியம் வழங்கப்படாததால் கிராம உதவியாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதை கவனத்தில் எடுத்துக்கொண்டு அவர்களுக்கு கால முறை ஊதியத்தை நிர்ணயம் செய்யவும், பணியின்போது உயிரிழக்கும் கிராம உதவியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கவும் வலியுறுத்தியுள்ளார்.