News April 8, 2025
குறிவைக்கப்படுகிறாரா வேல்முருகன்?

சபாநாயகர் தன்னை மட்டும் குறிவைத்து பேசவிடாமல் தடுக்கிறார் என தவாக தலைவர் வேல்முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார். அண்மையில் சபாநாயகர் முன்பாக கை நீட்டி பேசியதால் அதிகபிரசங்கித்தனமாக நடந்து கொள்வதாக வேல்முருகனை CM ஸ்டாலின் விமர்சித்திருந்தார். அப்போது முதலே உரசல் ஆரம்பித்திருந்தது. இந்தச் சூழலில், அவையில் தான் பேச எழுந்தாலே சபாநாயகர் எரிச்சலடைகிறார் என விமர்சித்துள்ளார்.
Similar News
News October 21, 2025
குளிர்காலத்தில் முகம் வறண்டு போகாமல் இருக்க..

குளிர்காலத்தில் முகம் வறட்சியாக காணப்படும். இதனை தவிர்த்து, முகத்தை பளபளப்பாக மாற்ற சிம்பிளான வழிகள் இருக்கிறன. ➤சருமத்தில் அடிக்கடி சோப்பு பயன்படுத்துவதை தவிர்க்கவும். ➤அதற்கு பதிலாக கடலை மாவை பயன்படுத்துங்கள் ➤குளிப்பதற்கு முன் தேங்காய் எண்ணெயை முகத்தில் தடவி அரை மணி நேரம் ஊறவிடுங்கள் ➤வாரத்திற்கு ஒருமுறை கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி ஊறவைக்கலாம். SHARE பண்ணுங்க.
News October 21, 2025
Cinema Roundup: போர் வீரனாக நடிக்கும் பிரபாஸ்

*விஷ்ணு விஷாலின் ‘ஆர்யன்’ படத்திற்கு U/A சான்றிதழ் தரப்பட்டுள்ளது. *’பைசன்’ படத்தை தொடர்ந்து ‘டாடா’ கணேஷ் பாபு இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கவுள்ளதாக தகவல். *பிரபாஸ் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது. *பவன் கல்யாணின் ‘ஓஜி’ படம் வரும் 23-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிறது. * மிர்ச்சி சிவாவின் ‘தமிழ் படம்’ 3-ம் பாகத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளது.
News October 21, 2025
பாகிஸ்தானில் காற்று மாசுபாடு ஏற்பட்டதற்கு இந்தியா காரணம்

இந்தியாவின் தீபாவளி கொண்டாட்டம், பாகிஸ்தானுக்கு தலைவலியாக மாறியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். வட இந்திய மாநிலங்கள் பட்டாசு வெடித்து கொண்டாடியது, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் தீவிர காற்று மாசுபாட்டை ஏற்படுத்தியுள்ளது. இதனால், டெல்லிக்கு அடுத்தபடியாக உலகின் அதிக மாசுபாடான நகரங்களில் பஞ்சாப்பின் லாகூர் 2-ம் இடம்பிடித்துள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.