News April 8, 2025
தேங்காய் தோட்டத்தில் மயங்கி விழுந்து பெண் பலி

புன்னம் பகுதியை சேர்ந்த பொத்தான் என்பவரது மனைவி பார்வதி, (55) இவர் பழமாபுரம் பகுதியில், சேகர் என்பவரது தேங்காய் தோட்டத்தில், வேலை செய்து கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்தார். அப்போது, அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். இது குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News August 27, 2025
கரூரில் கட்டாயம் தெரிய வேண்டிய எண்கள்!

கரூர் மாவட்ட தாசில்தார் எண்கள்:
▶️கரூர்: 04324-260745
▶️அரவக்குறிச்சி:04320-230170
▶️குளித்தலை: 04323-222015
▶️கிருஷ்ணராயபுரம்: 04323-243366
▶️மண்மங்கலம்: 04324-288334
▶️கடவூர்: 04323-251444
▶️புகழூர்: 04324-270370
உடனே இதை நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News August 27, 2025
கரூர்: 19 வயது மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி மோசடி

கரூர்: லாலாபேட்டை ஆண்டியப்பன் நகரைச் சேர்ந்தவர் ரெங்கநாதன் 48. இவரது மகள் லோகப்பிரியா (19) நர்சிங் முடித்து லாலாபேட்டை தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகின்றார். நேற்று முன்தினம் வேலைக்கு சென்று வருவதாக கூறிச் சென்றவர் காணவில்லை. இதுகுறித்த போலீசார் விசாரணையில் மேல தாலியாம்பட்டியைச் சேர்ந்த திருமணமான ரங்கநாதன் என்பவர் ஏமாற்றி கூட்டிச் சென்றுள்ளார் எனத் தெரிய வந்தது.
News August 27, 2025
கரூர் ராக்கெட் பந்து வீரர்கள் சாதனை!

கடந்த வாரம் ஓசூரில் நடைபெற்ற மாநில அளவிலான U-19 பிரிவிலான ஆண்களுக்கான ராக்கெட் பந்து போட்டியில் கரூர் மாவட்டம் 4ஆம் இடம் பிடித்தது. இதில் சிறப்பாக விளையாடிய குணா மற்றும் யோகபாலன் ஆகிய இருவரும் தேசிய போட்டிக்கு தமிழக அணியில் விளையாட தேர்வாகியுள்ளனர். இவர்களுக்கு கரூர் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், செயலாளர் மணிகண்டன், பொருளாளர் வைரப்பெருமாள் வாழ்த்துகள் தெரிவித்தனர்.