News April 8, 2025

ஆட்சியர் அலுவலகத்தில் பைக் திருட்டு

image

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முட்டத்தூர் தனியார் நிறுவன ஊழியர் குமார் தனது பல்சர் பைக்கில் வந்தார். பைக்கை நிறுத்தி விட்டு உள்ளே சென்று திரும்பிய சில நிமிடங்களில் பைக் திருடு போயிருந்தது. இதுகுறித்து அவர் தாலுகா போலீசாரிடம் புகார் அளித்தார். ஆட்சியர் அலுவலகத்தில் அரங்கேறிய இந்த திருட்டு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News April 19, 2025

ரூ. 6 லட்சம் மதிப்புள்ள 280 கிலோ குட்கா பறிமுதல்

image

திருவெண்ணெய்நல்லூர் போலீசார் நேற்று மாலை ஆனத்துாரில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பைக்கில் மூட்டையுடன் வந்த வாலிபரை நிறுத்தி சோதனை செய்த போது குட்கா இருப்பது தெரியவந்தது. விசாரணையில் பைக்கில் வந்தவர் மரக்காணம் பகுதியை சேர்ந்த மதன்குமார் என்பதும், திருவெண்ணெய்நல்லூர் அருகே தங்கி, குட்கா பொருட்களை பல பகுதிகளுக்கு சப்ளை செய்து வருவதும் தெரியவந்தது. அதனை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

News April 18, 2025

தீராத நோய் தீர்க்கும் வைத்தீஸ்வரன் கோவில்

image

ஒவ்வொரு மனித உடலும் ஆலயம் போன்றது’ என்பது சித்தர்களின் வாக்கு. பணம், பதவி எது இருந்தாலும் நோய்நொடி இல்லாத வாழ்க்கையே சிறந்த செல்வம். தீராத நோய்களை தீர்க்கும் வைத்தீஸ்வரன் கோவில், விழுப்புரம் மாவட்டம் சிந்தாமணி நல்லூரில் அமைந்துள்ளது. இங்கு நவகிரகங்கள் அனைத்தும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்து, இறைவனின் கட்டளைக்குப் பணிந்து பக்தர்களின் நோய்களையும் தோஷங்களையும் போக்குவதாக ஐதீகம். ஷேர் பண்ணுங்க

News April 18, 2025

இலவச கல்வி; விண்ணப்பிப்பது எப்படி?

image

தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் 25% இடங்கள் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், மாணவர்களுக்கு எல்கேஜி முதல் 8ஆம் வகுப்பு வரை இலவச கல்வி அளிக்கப்படும். தேவையான ஆவணங்கள்: வருமானச் சான்றிதழ், இருப்பிடம் சான்றிதழ், சாதிச் சான்றிதழ். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. rte.tnschools.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!